Wednesday, 10 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015-2016 -கடகம்


கடகம் 
உங்கள் ராசிக்கு 6 , 9 ஆம் அதிபதி  குரு  ஜென்ம  ராசியில்  இருந்து   ராசிக்கு       2 ல் பெயர்ச்சியாகிறார்.

இதுவரை   காரிய தாமதம், தடை, வீண்  அலைச்சல்,  தொழில் , வேலையில் மந்த நிலை, நன்பர்கள்  உறவினர்களுடன்  சில பிரச்சனைகள்  போன்றவை ஏற்பட்டிருக்கும்.

இனி வரும் ஓராண்டு  காலம்  உங்களுக்கு மிக சிறந்த  காலம்  என்றே கூற வேண்டும். மன கவலையும், குழப்பங்களும் அகன்று  புத்துணர்வும், மன மகிழ்ச்சியும் அடைவீர்கள்,

குடும்பத்தில்   சுப காரியங்கள் நடக்கும்,  மகிழ்ச்சியான  மன  நிலை  இருக்கும் .  புதிய  வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு  உருவாகும். பொருளாதாரம்  மேன்மை அடையும்.

வேலை  தேடுவோருக்கு  வேலை  வாய்ப்பு  கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்   நடைபெறுவதற்கு  உகந்த காலமாகும்.

குழந்தை   தாமதமானவர்களுக்கு குழந்தை   பாக்கியம் கிடைக்கும். 

வேலை, தொழிலில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும்,  சிலருக்கு தொழில், வேலையில்  ஊதிய உயர்வும்,  பதவி உயர்வும்  கிடைக்கும்.

தன  நிலை  சிறப்பாக  இருக்கும், வரவேண்டிய  பாக்கி  தொகைகள் வந்து சேரும்,  குடும்பத்தில்   பிரிந்தவர்கள், நண்பர்கள்  ஒன்று சேர்வார்கள்.

நீண்ட நாள் ஆசைகள், கனவுகள்,முயற்சிகளால்  வெற்றி  அடையும்.

குரு   ராசிக்கு  6, 8, 10  இடங்களை  பார்வை  செய்கிறார்,  கடன்கள் பெரிதும்  குறையும்,  மருத்துவ  செலவுகள்  குறையும், போட்டியாளர்களும்  உங்களுடன் இணங்கி  செல்வார்கள்,  திடீர் பணவரவிற்கும்,  அடமானத்தில்  இருக்கும் பொருள்கள் மீட்கவும் சாதகமாக  இருக்கும். தொழிலில்  விரிவாக்கம்  செய்யவும், வேலைக்கு  புதிய ஆட்களை சேர்க்கும்  நிலையும்  உருவாகும்.

சிலருக்கு  சங்கம், கூட்டமைப்பு  போன்றவற்றில்  கெளரவ  பதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு,  பொதுசேவை அரசியலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான  காலம் 

உங்கள்  பிறந்த ஜாதகத்திலும்   தற்பொழுது  நல்ல திசா, புக்திகள் நடைபெறுமானால்  இது ஒரு பொற்காலம் எனலாம்.

2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும்  பண பரிவர்த்தனை, செயலில் கவனம் தேவை 

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வதும், இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 

No comments:

Post a Comment