Tuesday 8 December 2015

ஜோதிடத்தில் "சந்தி "


பொதுவாக சந்தி  என்படுவது  சந்திப்பு  என   பொருள்  கொள்ளலாம்.                உத :  இரண்டு  வெவ்வெறு   சாலைகள்  சந்திக்கும்  இடம்  சந்திப்பு , ஜோதிடத்தில்  சந்திப்பு  எனப்படுவது  ஒன்றின் முடிவு  மற்றொன்றின்  தொடக்கம்  என  பொருள்  கொள்ளலாம். இவை  இலக்கின சந்தி,  நட்சத்திர  சந்தி, திதி  சந்தி  என பல  உண்டு,   ஒரு ஜாதகர்  பிறந்த       நேரத்தில்  இவற்றில்  ஒன்றில் இருப்பின்  முக்கியமாக  இலக்கின சந்தியில்  இருப்பின்  பலன்  தீர்மானித்தலில் குழப்ப  நிலை ஏற்படும்.
ஒரு லக்கினத்தின்  (ராசி ) 30  பாகையில் முதல்  பாகைக்கு  உள்ளாக  இருந்தாலும்,  29 ம்  பகையில்  இருந்தாலும்,  முன், பின்  இலக்கினமா  என்ற   கேள்வி  உருவாகும்,  இவை  பஞ்சாங்ககளை  பொருத்தும், 
அயனாம்சத்தை  பொருத்தும்,  ஜாதகம்  கணிக்கும்  மென் பொருள்களை   பொருத்தும் மாறுபடும்.   சிலர்  இதனை  மிக எளிதாக  எடுத்து  கொள்கின்றனர்,  ஆனால்  இதனால்  பலன்களே  மாறி விடும், 

உதா :  ஒருவர்  பிறந்த  ஜாதகத்தில் கும்ப இலக்கின  சாந்தி  ( முடிவு பகை ) யோகாதிபதி  புதன்  5ல் ஆட்சி  (மிதுனம் ),   புதன்  திசை  நற்பலன்களை தரும், ஆனால்  இலக்கின  பாகை  மீனம்  தொடக்கம் ( வேறு  பஞ்சாங்க  முறைப்படி ) பலன்கள்  தலைகீழாக  மாறிவிடும், காரணம் மீன லக்கினத்திற்கு  புதன்  பாதகாதிபதி,  பலம் பெற்று 4ல்  ஏமாற்றமே  மிஞ்சும். 

சந்திகளை  கவனத்தில் கொள்வது  நன்று.

இத்தகைய  ஜாதகத்தினை  பிரசன்ன  முறையிலும்,  நடந்த, நடந்து கொண்டிருக்கும்  பலன்களை  கொண்டும்  சரி பார்க்கலாம்.

Tuesday 1 December 2015

மீன இலக்கினம் ( பொது பலன் )


மீன லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் 12 வது வீட்டிலுள்ள 
மீனத்தின் அதிபதி குரு. உங்களுக்கு, பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். நீங்கள் மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். உங்கள் மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காதல் கொண்டவர். உங்கள் தலை, பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து, நீங்கள் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். சில நேரங்களில், நீங்கள் ஆரோக்கியம் குன்றியவராய் உணருகிறீர்கள். நீங்கள், சிற்றின்பங்களில் பிரியம் கொண்டவர் காம உணர்ச்சி உடையவர். உடல் இன்பங்களை விரும்புபவர். உங்களுக்கு, திடீரென்று சில பாதிப்புக்கள் (அல்லது தோல்விகள்) ஏற்படலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம் ஆனால் பிற்பகுதியில், பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நல்ல சதைப்பற்று மிக்க கொழுப்பான கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட நீங்கள், எப்போதும் தூங்கிவழியும், மந்தமான கண்களை உடையவர். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் கடவுளிடம் பக்தியுடையவர் விருந்தோம்பல் இயல்புடையவர். குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் நீங்கள், விறுவிறுவென்று, தங்குதடையின்றி பேசும் திறன்படைத்தவர். நீங்கள் படித்த விவேகியாக இருப்பவர். அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள். நல்ல அழகிய தோற்றமுடைய உங்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், சுருட்டை மயிரும் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். பணம் சம்பாதிப்பதில், உங்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் உங்கள் எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். நீங்களும் உங்கள் மனைவியும், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள், கவிதையிலும் இலக்கியத்திலும்கூட, மிகுந்த விருப்பமுடையவர்

கும்ப இலக்கினம் ( பொது பலன் )

சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னத்தில், நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் கும்பம், ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்

மகர இலக்கினம் ( பொது பலன் )

மகர லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது ராசி அது. உங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும் கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள் மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள். சாதாரணமாகவே, உங்கள் குழந்தைப் பருவம் இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள். ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள். குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர் மரியாதைக்குரியவர்

தனுசு இலக்கினம் ( பொது பலன் )


 நீங்கள் தனுர் லக்னத்தில் பிறந்தவர். ராசி அமண்டலத்தில் அது 9 வது 
ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள். சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 வயதுக்குப் பின்னர், நீங்கள் நன்கு முன்னேறுவீர்கள். நீங்கள் நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவீர்கள். உங்கள் முன்தலை, பிரதானமாகத் தெரியும். உங்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. நீங்கள் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.


விருச்சிக இலக்கினம் ( பொது பலன் )

நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம், 
ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். நீங்கள் கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர். உங்கள் காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைக்கூட நீங்கள் பேசமாட்டீர்கள். மற்றவர்களின் எண்ணத்தை, உங்களால் மதிப்பிட முடிகிறது. ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம் ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், முன்னுக்கு வரக்கூடியவர். நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர் சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர் வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். முளை நோயினால் நீங்கள் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை, உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் அழகை ரசிப்பவர் சிற்றின்பப்பிரியர் நீங்கள் நடைமுறை ரீதியில் செயல்படுபவர் எதுவுமே நிரூபிக்கப்படாதவரை நீங்கள் அதனை நம்புவதில்லை. நீங்கள் பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது. நீங்கள் திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரர்.

துலா இலக்கினம் ( பொது பலன் )


துலா லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் 7 - வது ஸ்தானத்தில் 
இருப்பது துலாம் அதன் அதிபதி சுக்ரன்.  உங்களுக்கு, எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமய முக்யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு, பெரிய - பிரதானமாகத் தெரியும் முக்கு இருக்கும். நீங்கள், நல்ல, தகுதிவாய்ந்த ஒரு வர்த்தகர் ஜோசியத்தில் விருப்பமுடையவர். உங்கள் குரல் இனிமையானது கவர்ச்சியானது நீங்கள் பேராசை பிடித்தவர் அல்ல. நீங்கள் பல இடங்களுக்கும் பயணம் செல்வீர்கள். உங்கள் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில்போய் நீங்கள் வசிப்பீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு, வழக்கமான, மாமுலான ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்களுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் கண்யமான தோற்றமுடையவர். உங்களுக்கு முணூக்கென்றால் இருமல் வந்துவிடும் நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுகிறீர்கள். கவர்ச்சியான கண்களைக் கொண்ட நீங்கள், கடமை தவறாதவர் சாமர்த்தியசாலி மற்றவர்களின் எண்ணத்தை உங்களால் எடைபோட்டிட முடியும் எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் நீங்கள் பெயர் பெற்றவர். நீங்கள், ஒரு நல்ல தகுதிவாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் நீங்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில், நீங்கள் வெற்றியடைவீர்கள். சிற்றின்பங்களிலும் டாம்பீகமான சொகுசுப் பொருட்கள் மற்றும் வாசனை செண்டுகளிலும், உங்களுக்கு கொள்ளை ஆசை. நீங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில், நன்கு முன்னேறுவீர்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் நீங்கள், மகத்தான வெற்றி காண்பீர்கள். சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். அகலமான முகத்தையுடைய நீங்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான நீங்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்கு, நீங்கள் பயணம் செல்வீர்கள். நீங்கள், உண்மை  விரும்பி சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்.


கன்னி இலக்கினம் ( பொது பலன் )

நீங்கள் கன்னி லக்னத்தில் பிறந்தவர். ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்யாராசி. உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவீர்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள். சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை

சிம்ம இலக்கினம் ( பொது பலன் )

சிம்ம லக்னத்தில் பிறந்தவர் உக்ரமான 5 - வது ராசி சிம்மம். 
உங்களுக்கு கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் ஒன்று இருக்கும். உங்களுக்கு லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட, உங்கள் சருமத்தின் நிறம், சிவந்ததாய் இருக்கும். நீங்கள், விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாக போட்டியிடக் கூடியவர் நீங்கள், பிறரிடம் மரியாதைகாட்டி பணிவுடனும், லட்சியப் பேரவா கொண்டவராகவும் இருப்பவர். நீங்கள் முன்கோபியாக இருப்பீர்கள் தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பீர்கள்.உங்களில் பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிரதானமான, எடுப்பாக முன்தலை இருக்கும். உங்களுக்கு மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். உங்களுக்கு பெரும்
எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர் உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர் கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர் விருப்பம் கொண்டவர் உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது. காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள். லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.மிகஉயரியஅளவில்அரசுசலுகைகளையும்ஆதரவுகளையும்நீங்கள்பெறுவீர்கள்

கடக இலக்கினம் ( பொது பலன் )

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த - நான்காவது ராசி. 

நீங்கள், ராஜ தந்திரத்துடன், தளுக்காக செயல்படக்கூடியவர் ,நீங்கள், உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களை விரும்புபவர் செல்வ வளத்தை நீங்கள் அனுபவிப்பவர். நீங்கள் தண்ணீரில் விருப்பங்கொண்டவர். உங்கள் நண்பர்களின் எதிர்ப்பு, உங்களுக்கு இருந்து வரும். மிதமான ஒரு உடல்வாகுடைய நீங்கள், சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பவர். நீங்கள் சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பீர்கள். கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், நீங்கள், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பவர். வாழ்க்கையில், சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள், மிகவும் மனோபாவமானவர். மிகுந்த புத்திசாலி விவேகி கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி, உங்களிடம் இருக்கிறது. உணர்ச்சி மனோபாவம் அதிகமாக இருப்பதால், நீங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தைர்யம் மிக்கவர் துணிச்சலானவர் நீங்கள், மாறக்கூடிய மனநிலை உடையவர் நல்ல கற்பனை வளம் படைத்த நீங்கள், எப்போதும் அலைந்து திரியும், நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு, நீங்கள் நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள், விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடைய ஒரு மனிதர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை நீங்கள், மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்கிறீர்கள். பல இடங்களிலிருந்தும் உங்களுக்கு பணவசதி கிடைக்கும். நீங்கள் சுயநலவாதி தாராள சிந்தை கொண்டவர். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நீங்கள், பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மிகப் பெருமளவில் உணர்ச்சி பாதிப்புக்கு உட்பட்டவர் உங்கள் சொந்த நலன்பற்றியே, நினைப்பவர் மாற்றத்தை விரும்புபவர் மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

மிதுன இலக்கினம் ( பொது பலன் )

நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர். மிதுனம், ஒரு பொதுவான ராசி. 
ராசி மண்டலத்தில், அது முன்றாவது ராசி எனவே, கோதுமை நிறத்தையத்த மாநிறமாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் ஒரு பிறவி. கலைகளிலும் பாடல்களிலும் உங்களுக்கு கொள்ளை ஆசை. உடல் இன்பங்கள் (சிற்றின்பங்கள்) காண்பதில் நீங்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர். நீங்கள் நல்ல காம உணர்ச்சி கொண்டவர். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராக நீங்கள் இருப்பீர்கள். சூது நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நீங்கள், கவிதையுள்ளம் கொண்டவர். பல சமயத் தலங்களுக்கும் பயணம் செல்லும் நீங்கள், விஞ்ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 32, 35 ஆம் வயதிலிருந்து, நீங்கள் அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் பிரவேசிப்பீர்கள். பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்ட நீங்கள், புகழை எட்டிவிடத் துடிப்பீர்கள் ஓயாமல் ஏங்குவீர்கள். உங்கள் நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும். நீங்கள், நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். அரசு மற்றும் சமுதாயத்திடமிருந்து, உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் புகழும் கிடைக்கும். கலைகள் மற்றும் விஞ்ஞான அறிவை, நீங்கள் பெற்று விளங்குவீர்கள். ஜலதோஷம், இன்?ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் பீடிக்காமல், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முலநோய், காய்ச்சல், போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கையில், பெருமளவிலான மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள் அனுபவிப்பீர்கள் உங்களுக்குக் குடும்பத் தொல்லைகள் இருக்கலாம். சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் படைத்த நீங்கள், எதையும் கற்பதில் விருப்பம் கொண்டவர். ஒரே சமயத்தில் பலதரப்பட்ட வேலைகளையும் நீங்கள் மேற்க்கொண்டு விடுவதுதான், உங்களிடம் காணூம் குறைபாடு. நீங்கள் நன்கு உறங்கினால், நல்ல உடல் ஆரோக்கியத்தை, உங்களால் பராமரித்திட முடியும். எதிலுமே குறுக்கு வழி - அதிலும் சுறுக்கு வழியை, நீங்கள் விரும்புவதுதான், உங்களின் ஒரு விநோதமான மனப்போக்கு நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் பல்வேறு வழிகளையும் கடைபிடிப்பதன் முலம், நீங்கள், உங்கள் திட்டங்களை மிகவும் விரைவாக நிறைவேற்ற முடிகிறது. உங்களுக்கு நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் இருக்கும்

ரிஷப இலக்கினம் ( பொது பலன் )

 நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான, 
இரண்டாவது ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே உங்களுக்கு நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கரிய கண்களும், தலைமுடியும் இருக்கும். உங்களுக்கு சுருட்டை முடி இருக்கலாம். நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். நீங்கள் தீய குணமுடையவர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டவர். நீங்கள் மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர். உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களின் நட்பை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்களாகவே ரசித்து, அனுபவித்து இன்பம் காணக்கூடியவர். மிகவும் மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பவர். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக்கூடியவர். நீங்கள் நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் ராஜ தந்திரம் படைத்தவர் உங்கள் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தோட்டங்கள், மனைகள் போன்ற எஸ்டேட் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். கலையில் ஆர்வம் கொண்ட நீங்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு மென்மையான சருமம் இருக்கும். அழகையும் டாம்பீகமான சொகுசையும், மிகவும் விரும்பும் நீங்கள், உங்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். உங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். உங்கள் மனைவி/கணவர் - உயரிய அந்தஸ்தில் இருக்கக்கூடும். நீங்கள் பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர் ஓரளவிற்கு, உங்கள் சுபாவத்தில், பெண்மை குடிகொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த நீங்கள், நல்ல மனிதர்களுடன் சம்பந்தப்பட்டவர். உங்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, நீங்கள் எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுகிறீர்கள். காதல் விவகாரங்களில், நீங்கள் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள். குடும்ப ரீதியில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், எப்போதுமே குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர். நல்ல உடுப்புக்களை விரும்பும் நீங்கள் வாழ்க்கையில், பல சுகபோகங்களையும் ரசித்து அனுபவிக்கக் கூடியவர். 36 வயதில், உங்களுக்கு சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம்

மேஷ இலக்கினம் (பொது பலன் )

மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். 
அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும். காதல் விவகாரங்களில் நீங்கள் கொஞ்சம்கூட, ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நீங்கள், நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். நீங்கள் பிறருடன் சண்டைபிடிப்பவர் நாசூக்கு அற்றவர் அவசரப்படக் கூடியவர் கோபக்காரர் செவ்வாயினால் ஆளப்படுபவர். நீங்கள் மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சிவெறி கொண்டவரல்ல நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட நீங்கள், தைர்யம் மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உங்களுக்கு உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச் சாலப் பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர். நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Saturday 7 November 2015

தீபாவளி (தீப ஒளி) திருவிழா பெயர் காரணம் ?





சுவாமி  விவேகானந்தர்  கூறியது  உலக மதத்திற்கெல்லாம்  தாய்  மதமாம்  இந்து  சமயம் என்பது,   நமது சமயத்தில் இறைவடிவமும்   சரி, வழிபாடுகளும் சரி பல்வேறு  வகையில் பின்பற்றுகின்றோம்,  இந்து  சமயத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு  பண்டிகைகளுக்கும்  பின்  ஒரு புராணகதை உண்டு, இதன்படி  இறவனை ஒளியை கொண்டு  வழிபடும் திருவிழாவில் பிரதானமாக  வருவது   தீபாவளி  பண்டிகை  ஆகும்.



பொதுவாக  தீபாவளி  என்பது பகவான் கிருஷ்ணன், நரகா சுரன் என்ற  அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக் கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதா ல், தீபாவளி என்னும் பண்டிகையை கொண் டாடுவதாக கூறப்படுகிறது  என்பது  அனை வரும்  அறிந்தது, எனினும் தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.







தீபாவளிஎன்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.


இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்ல ப்படுகிறது.இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது




அன்னை சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.



அனைவருக்கும்   இனிய  தீப ஒளி  திருநாள் வாழ்த்துகள்   

நன்றி 
ஆஸ்ட்ரோ கண்ணன்

Friday 30 October 2015

ஜோதிடம்


ஜ்யோதிஷம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஒளியைப் பற்றிய சிறப்பு என்று பொருள். மனிதனுக்கு முக்கிய உறுப்பாக கண் இருப்பது போன்று வேதத்திற்கு கண்ணாகத் திகழ்வது " ஜோதிடம் " ஆகும்.

நமது இந்து சமயத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் உள்ளன. இவற்றில் ஆழமான தத்துவங்கள், மிக உயர்ந்த வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கியுள்ளன. இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக ஆறு பிரிவுகள் உள்ளன.


1. சிக் ஷை (மருத்துவம்)
2.வியாகரணம் (கல்வி )
3.சந்தஸ் (சங்கீதம்)
4.நிருத்தம் (நாட்டியம்)
5.ஜ்யோதிஷம் (ஜோதிடம்)
6.கல்பம் (அழியாநிலை)


இவற்றுள் ஜோதிடம் வேதத்தின் கண்களாக போற்றப்படுகிறது.
மேஷாதி பன்னிரண்டு ராசிகளின் வழியாக சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள் சஞ்சாரம் செய்வதனால் நிகழும் சுக துக்கங்களை அறிய உதவும் கணித சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம் ஆகும்.

Wednesday 23 September 2015

நட்சத்திரப்படி குழந்தை பெயர்கள்

நட்சத்திரம்தமிழ் எழுத்துக்கள்English Letter
அசுபதிசு, சே, சோ, லCHU,CHEY,CHO,LA
பரணிலி, லு, லே, லோLI,LU,LEY,LO
கிருத்திகைஅ, இ, உ, எAO,Ee,UO,A
ரோகிணிஒ, வ, வி, வுO,VA,VEE,VOO
மிருகசீரிஷம்வே, வோ, கா, கிVAY,VO,KAA,KE
திருவாதிரைகு, க, ச, ஞKOO,GHAA,JNA,CHA
புனர்பூசம்கே, கோ, ஹ, ஹிKAY,KO,HAA,HEE
பூசம்ஹூ, ஹே, ஹோ, டHOO,HAY,HO,DAA
ஆயில்பம்டி, டு, டே, டோDEE,DOO,DAY,DO
மகம்ம, மி, மு, மெMAA,MEE,MOO,MAY
பூரம்மோ, ட, டி, டுMO,TAA,TEE,TOO
உத்திரம்டே, டோ, ப, பிTAY,TO,PAA,PEE
அஸ்தம்பூ, ஷ, ந, டPU,SHAA,NAA,THA
சித்திரைபே, போ, ர, ரிPAY,PO,RAA,REE
சுவாதிரு, ரே, ரோ, தRU,RAY,RO,TAA
விசாகம்தி, து, தே, தோTHEE,THOO,TAHY,THO
அனுஷம்ந, நி, நு, நேNA,NEE,NOO,NAY
கேட்டைநோ, ய, இ, பூNO,YAA,YEE,YOO
மூலம்யே, யோ, ப, பிYAY,YO,BAA,BEE
பூராடம்பூ, த, ப, டாBU,DHAA,BHA,DHA
உத்திராடம்பே, போ, ஜ, ஜிBAY,BO,JAA,JEE
திருவோணம்ஜூ, ஜே, ஜோ, காJU,JAY,JO,GHA
அவிட்டம்க, கீ, கு, கூGAA,GEE,GOO,GAY
சதயம்கோ, ஸ, ஸீ, ஸூGO,SAA,SEE,SOO
பூரட்டாதிஸே, ஸோ, தா, தீSAY,SO,DAA,DEE
உத்திரட்டாதிது, ச, ஸ்ரீ, ஞDHU,THA,SA,GHEE
ரேவதிதே , தோ, ச, சிDE,DO,CHAA,CHEE

27 நட்சத்திர பொது பலன்கள்

அசுவினி
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள்.
செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர். தைரியம் உடையவர், செய் தொழிலைத் தவறு இல்லாமல் செய்பவர், பெண்கள் விரும்பத்தக்கவர். தருமம் செய்யும் பண்புடையவர், பொய் பேச மாட்டார். ஆடை அணிகலனில் விருப்பம் உடையவர். சிறு கோபத்தை உடையவர். மிகுந்த புகழை உடையவர். கெட்டிக்காரர். சிவந்த கண்களையும், அகன்ற மார்பையும் உடையவர். தூய்மையானவர். உயர்ந்த நெற்றி உடையவர். சாத்வீக குணத்தை உடையவர்.
1. அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கோள் சொல்வோன், மனசஞ்சலம் உடையவர், பாவி, அழகற்றவர், அந்தியரிடம் அன்பு காட்டுபவனாக இருப்பார்.
2. அசுவினி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறரின் மனோ பாவங்களை அறிபவர், அழகுள்ளவர், நன்மை செய்பவர், சாத்திரம் உணர்பவர், ஞானி போன்ற பண்புகளை உடையவனாக இருப்பார்.
3. அசுவினி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கணிதக் கலையில் விருப்பம் உள்ளவர். நல்ல புத்திமதி நுட்பம் உடையவர், மூலவியாதி உடையவர், நல்ல செயல்களையே நினைப்பவனாக இருப்பார்.
4. அசுவினி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் உடம்பு சிறிது கூனி இருக்கும். மிகுந்த அறிவுள்ளவர், ஜோதிடம் அறிந்தவர், இந்திரன் போன்றவர், காமகுணம் உள்ளவர், சத்திரியர் போன்ற பண்புகளை உடையவர்.

பரணி

பரணி நட்சத்திர பிறந்தவர்கள் அனைத்து முழுமையாகப் முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள்.
நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.
பெற்றோருக்கு இனியவர், ஞானி, சிறு நித்திரை உடையவர். சிறு கோபி, தரும சிந்தனை உடையவர். செல்வம் உடையவர், புகழ், திடமான வாக்கு உடையவர், தாம்பூலத்தில் விருப்பம் உடையவர், உடலின் இடப்பாகத்தில் மரு உள்ளவர், சாமர்த்தியம் உடையவர், பெண்களில் சொற்களில் பிரியம் உடையவர், சிறிய மோவாய்க் கட்டையை உடையவர்.
1. பரணி முதல் பாதத்தில் பிறந்தவர் சிவப்பு நிறம் உள்ளவர். வீரன், பலசாலி, நீதிமான், பகைவரை வெல்லுபவர், சிவந்த உரோமம் உடையவனாகவும் இருப்பார்.
2. பரணி இரண்டாம்பாகத்தில் பிறந்தவர் ஞானி, நிபுணன், சோம்பல் உடையவர், தருவார், சாஸ்திரம் சொல்பவனாகவும் இருப்பார்.
3. பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், உருளும் கண்களை உடையவர், நல்ல உயரமானவர்.
4. பரணி நாலாம் பாதத்தில் பிறந்தவர் உடல் பருமனானவர், கோபம் உடையவர், அரசு அரசியல் பணி செய்பவர், துர்க்குணம் உள்ளவனாகவும் இருப்பார்

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள்.
வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். ரசவர்க்கங்களில் விருப்பம் உடையவர், அற்ப நித்திரை உடையவர், சொல் சாதுரியம் உடையவர், பொய் பேசியாவது பொருள் சம்பாதிக்கும் திறமை உடையவர், அறிவாளி, அரசர்கள் விருப்பத்திற்கு உரியவர், பரிசு பெறுபவர், பலவான், வஞ்சக மனம் உடையவர், மார்பில் மரு உடையவர், வழக்குத் தொடுக்கும் துணிந்த மனம் உடையவர்.
செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும்.
1. கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர் , ஆசாரமுள்ளவர், வித்துவான், பிரபு இலாப சேகரர், சூரன், பசுப்பீரிதி உள்ளவர், புத்திமான் ரோகமுள்ளவர்.
2. கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் , ஆசாரமற்றவன், கோபி, வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், சாஸ்திரங்களை விரும்பாதவர்.
3. கிருத்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர், துஷ்டபெண்களைச் சேருபவர், புத்தியற்றவர், மிகுந்த சூரன், கோபி, தீமைகளையே பிரதானமாக செய்பவர்.
4. கிருத்திகை நான்காம் பாதத்தில் பிறந்தவர் தரித்திரன், சாஸ்திரம் கற்காதவர், மனஸ்தாபம் உடையவர், பொறுமையற்றவர், துக்கம் உடையவர், ரோகம் உடையவர்

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்டே செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். தண்ணீர் அதிகம் குடிப்பதில் விருப்பம் உடையவர், சொன்ன சொல் கேட்பவர். பண்டிதனும் அரசனும் ஆவார். அன்னதானம் செய்பவர், இரும்பு வியாபாரி,நெய், பால் இவற்றில் விருப்பம் உடையவர். இரண்டு கண்களும் பருத்து நெற்றி சுருங்கி இருப்பவர், வஞ்சகம் பேசாதவர், வலுத்த உள்ளங்கால் உடையவர், திடமான நடையுடையவர். கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
1. ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர் பொருள் உள்ளவர், அழகுள்ளவர், அலைச்சல்படுவோன், கருமி, அந்நியருக்குத்துன்பம் தருபவர், பொறுமையற்றவர், வர்மி, ரோசம் உடையவர், ரோகம் உடையவர்.
2. ரோகிணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கருணை உடையவர். சாந்த குணம் உடையவர். ரோகி, ஆசாரம் உள்ளவர், உண்மை பேசுவார், விரும்பிய பெண்ணை மணப்பான், வாய் சாதுர்யம் உள்ளவர், ஆசை உள்ளவர்.
3. ரோகிணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கணித வித்தையில் வல்லவர், சங்கீத ஞானம் உடையவர், மந்திரங்கள் அறிந்தவர், சுகவான், பஞ்ச காவியங்கள் அறியாதவர்.
4. ரோகிணி நான்காம் பாதத்தில் பிறந்தவர் உண்மை பேசுபவர், அந்நியரின் சொத்தை விரும்புபவர், பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். காலையில் நீராடுவதில் விருப்பம் உடையவர். பரந்த கண்களையுடையவர். மயிரில் அழகுடையவர், கல்வியில் சிறந்தவர், திடமான தேகம் உடையவர், உள்மனதில் உள்ள கருத்தை வெளியிட விரும்பாதவர், பாட்டிலும் கூத்திலும் விருப்பமுடையவர். தாம்பூலப்பிரியர், நினைத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர், உயர்ந்த நெற்றியை உடையவர் ஞானி. விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்
1. மிருகசீரிஷம் முதல் பாதத்தில் பிறந்தவர் செல்வம் உடையவர். பகைவரை வெற்றி கொள்பவர், பருமனான சரீரம் உடையவர். கோபம் உடையவர். ஆசாரம் இல்லாதவர், இராட்சசத் தன்மை உடையவர்.
2. மிருகசீரிஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் வழக்குரைப் பவர், உபதேசம் செய்பவர், சாது மனத்திற்கு உகந்தவர், உண்மை பேசுபவர், பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.
3. மிருகசீரிஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் உயர்ந்த குணம் உடையவர். உத்தமன், சாது, சந்தோஷம் உடையவர், ஆசாரம் உடையவர், புத்திமார், சீமார்.
4. மிருகசீரிஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் புத்திமார், மெய்யே உரைப்பவர், சாது, தருமம், செய்பவன், காமம், கோபம், வஞ்சகம் உடையவர்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். பொய்யுரை சொல்வோன், கீர்த்தி உடையவன். தரித்திரன், நீண்ட வடிவமுடையவன், கணுக்காலில் வியாதியுடையவன், கொடிய சண்டை செய்பவன், தலைமயிர் அழகுடையவன். இருகண்களும் சிவந்து இருக்கப் பெற்றவன். தேக பலமுடையவன், கோபி, பந்துக்களுடையவன், உயர்ந்த மூக்குள்ளவன். மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.
1. திருவாதிரை முதல் பாதத்தில பிறந்தவர் இனிய வசனங்களைப் பேசுபவர், நல்லகுணம் உள்ளவர். மகாத்துமா, பெண்களுக்கு இனியவர்.
2. திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் , பேசுவதில் கெட்டிக்காரர், கருணை இல்லாதவர், தர்க்கம் புரிபவர், கல்வியில்லாதவர், தக்க பெண்களோடு போகம் கொள்பவர்.
3. திருவாதிரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் வாதரோகம் உள்ளவர், கோபம் உடையவர், கருணையற்றவர், கோள்சொல்பவர், பெண்களுக்கு போகத்தைத் தராதவர்.
4. திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர் விவேகம் உடையவர். சுற்றத்தாருக்கு விரோதி. ஈனகுணம் உடையவர், அழகுள்ள உடல் உள்ளவர், கெட்டவர்

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். சொல் சாதுர்யர், அகங்காரம் உடையவர், பரந்த தோள்களை உடையவர். சிக்கன முடையவர். நீண்ட வழி நடப்பவர். கடுமையாகப் பேசுபவர், கள்ளன், மலர் போன்ற கையை உடையவர். அறிவாளி, பொய் பேச மாட்டார். பித்த தேகம் உடையவர். கல்வியில் ஊக்கம் கொண்டவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.
1. புனர்பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பருமனான உடல் உள்ளவர். பிலுக்கன், போகி, செவிடன், காமி, பன்றி மயிர் போலும் உரோமம் உள்ளவர்.
2. புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பித்தம் சேர்ந்த உஷ்ண தேகம் உடையவர், சோம்பேறி, ஆசாரம் இல்லாதவர், தூக்கம் உடையவர்.
3. புனர்பூசம் மூன்று பாதத்தில் பிறந்தவர்கள் குஷ்டரோகி, சாது, அலைச்சல் உள்ளவர், காவியம் அறியாதவர், பல் வியாதி உள்ளவர், நீண்ட ஆயுள் உள்ளவர்.
4. புனர்பூசம் நான்காம் பாதத்தில பிறந்தவர்கள் நல்ல செயல்கள் செய்பவர், குள்ளமாக இருப்பவர், நல்ல அழகுடையவர், பார்வை லட்சணம் அறிபவர்.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். குதிரை உடையவர். வழக்கு உரைக்கும். கள்ளன், ஏளனமாக பேசும் குணம் உடையவர். தாய் தந்தையரை இரட்சிப்பவன், கொடியன், ஒழுக்கம் உள்ளவர், தனவான், கண்களும் மூக்கும் அழகாக உள்ளவன், பசி பொறுக்கமாட்டார், வாசனைப் பொருட்களைத் தரிப்பதில் விருப்பம் உடையவர், நல்லவர், செல்வம் உடையவர். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக்கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.
1. பூசம் முதல் பாதத்தில் பிறந்தவர் வயிற்று நோய் உடையவர். நிஷ்டூரன், தருமவார், கோபமுடையவர், புத்திசாலி, தீர்க்க ஆயுள் உடையவர், கொடியவர்.
2. பூசம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் பிரபுவார், எக்காரியத்தையும் தடை செய்பவன், மக்களை வருத்துபவர், நிதானம், உள்ளவர், அன்னியரிடம் நட்பு உடையவர்.
3. பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சுற்றத்தாருக்கு இனியவர், புத்திசாலி, ஞானி, சந்தோஷம் உடையவர், பசுவிடம் விருப்பம் உடையவர், சுற்றத்தால் நல்ல காரியம் முடிப்பவர்.
4. புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் சண்டைக்காரர், கோபம் உள்ளவர், பெண்களிடம் அன்பு உள்ளவர்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பகையை விரும்புவர், பெற்றோருக்கு விருப்பம் உடையவர். மனதில் துக்கம் உடையவர், காட்டில் திரிபவர், சிற்றுண்டியை விரும்புபவன் புத்திமான், வஞ்சகம் இல்லாமல் எவரையும் ஏளனம் செய்பவர், சுகம் உடையவர், தன்னைவிட வலிமையான யாரையும் கண்டு அஞ்சாதவர், விழியும் புருவமும் உயர்ந்து ஒதுங்கி இருப்பவர். கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர்.
1. ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர் மிகுந்த சொல்வன்மை உள்ளவர். பெண் போன்ற வடிவம் உடையவர். நல்ல அறிவுடையவர், மகிழ்ச்சியுடன் இருக்கும் தன்மை உடையவர், பலவிதமான செயல்களைச் செய்பவர்.
2. ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் அயலான் இடும் வேலைகளைச் செய்பவன், அழகுடையவர், ஏக்கமுடையவர், ஆசாரமுடையவர், தீய வழியில் நடப்பவர், துர்ப்புத்தி உடையவர்.
3. ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் முன்கோபி, மனைவியை வதைப்பவர், ஞானி தாமத குணமுள்ளவர், நலமற்ற சொற்களைப் பேசுபவர், மிகவும் நிபுணர்.
4. ஆயில்யம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் பொன்னை அழிப்பவர், கொலை செய்பவன், கோபக்காரர், தீயவனுக்கு நல்லவர், இழிந்த பெண்களின் போகத்தை விரும்புபவர், வியாதி உடையவர்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலைகயையும் சமாளிக்க கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள்.
உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். பல திசைகளில் சுற்றுவதில் விருப்பம் உடையவர். அழகர், இசைப்புலவன், நீராடுவதில் விருப்பம் உடையவர், அழகன், இசைப்புலவர், நீராடுவதில் விருப்பம் உடையவர், வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர், செல்வம் உடையவர், வலது பக்கத்தில் மரு உடையவர், நியாயஸ்தன், அற்ப நித்திரை உடையவர். ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர்.
1. மகம் முதல் பாதத்தில் பிறந்தவர் மற்றவர்களுக்கு பயம் அளிக்கும் சிவந்த கண்களை உடையவர், சிவந்த நிறம் உடையவர், சிறந்த மதியூகி, சிவந்த ரோமத்தை உடையவர்.
2. மகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல அறிவு இல்லாதவர், குற்றம் உடையவர். செலவழிப்பதில் விருப்பம் உள்ளவர். பொன் போன்ற கண்களை உடையவர், காது நோய் உடையவர்.
3. மகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலசாலி, நோய்கள் உள்ளவர். சாது, கடின சொற்களைப் பேசுபவர், பொல்லாதவர், பரிசுத்தமானவர், பேராசை உடையவர்.
4. மகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் ஒழுக்கமுடையவர், பெண்கள் பேச்சை கேட்பவர், சிரங்கும் வேறு ரோகங்களும் உள்ளவர். நல்ல மனைவி அமையப் பெற்றவன், இனிய சொற்களை பேசுபவர்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள்.
வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். இதமான வார்த்தைகளைப் பேசுபவர், கல்விமான், சிவந்த கண்கள் உடையவர், மிகவும் உழைத்துச் செல்வத்தை தேடுபவர் , பின்னால் வருவனவற்றை முன்னாலேயே அறிந்து செயல்படுபவர். வியாபாரி, கடினமான வார்த்தைகளைப் பேசுபவர், பலவிதமான எண்ணங்களை எண்ணுபவர், வேசிகளின் பிரியர், நகை அழகர், உயர்ந்த பண்புள்ளவர். ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப்பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.
1. பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர் தீரன், இனிமையான பேச்சு உடையவர், கோபம் உடையவர், ஆசாரம் உள்ளவர், வீரம் உடையவர், செல்வம் இல்லாதவர், சிறிய வீட்டை உடையவர், வியாபாரம் செய்பவர்.
2. பூரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் உழவர், தாகம் உடையவர், மனக்கிலேசம் உடையவர், பிறர் உதவி இல்லாதவர்.
3. பூரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல குணமுடையவர், செல்வமேம்பாடு உடையவர், புகழ் உடையவர்.
4. பூரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் துக்கம் உடையவர், வடு உள்ளவர், நித்திப்பவர், பிராமணர்களையும் தெய்வங்களையும் துதிப்பவர்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்டே செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். வஞ்சகம் இல்லாமல் பேசுபவர், கைவலி உடையவர், கல்விமான், அழகான கண்களையும் வாயையும் உடையவர், பெண்களிடம் விருப்பம் உள்ளவர், முன்கோபி, மார்பு முகம் இவற்றில் மரு உள்ளவர், பொய்யில்லாத சூரன். நீராடுவதில் விருப்பம் உடையவர், அற்பப்பசி உடையவர், பக்தியுள்ளவர், நடை அழகர், தருமம் செய்பவர், ஞானி. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர்.
1. உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர் இனிய வசனம் பேசுபவர், புகழ் உடையவர்,கண்ணியமானவர், தீரன், நல்லவர், சுற்றத்தார் மேல் விருப்பம் உடையவர்.
2. உத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கருமி, தரித்திரன், ஊண் விருப்பம் உடையவர், குற்றமும் சஞ்சலமும் உடையவர், யாசகம் செய்பவர்.
3. உத்திரம் முன்றாம் பாதத்தில் பிறந்தவர் பிலுக்கண், உண்மை பேசுபவர், பசுமேய்ப்பன், ஆசாரம் உடையவர்.
4. உத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நன்றி மறவாதவர் பிறரை மதிக்காதவர், மற்றவரைத்தூஷிப்பவர், வாலிப வயதில் தாயை இழப்பவர்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள்.கோபி, கல்விமான், சிறுபசி உள்ளவர், தருமவார், இன்பக் குறிப்பு உள்ளவர், சூரன், அழகர், கடினமான வார்த்தைகள் பேசுபவர், புத்திமான், பின்வயதில் செல்வம் பெறுவர், சிறுகண் உடையவர், அகன்ற மார்பை உடையவர், பின்கால் அழகர், குருபக்தி உடையவர். ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.
1. அஸ்தம் முதல் பாதத்தில் பிறந்தவர் கலகம் செய்பவர், பொய்யர், கர்வம் உடையவர், பிலுக்கண் ஆசாரம் உடையவர், பசுக்களிடம் பிரியமுள்ளவர்.
2. அஸ்தம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல குணமானவர், வாலிபத்தில் தாயை இழப்பவர், ஆடல் பாடலில் விருப்பம் உடையவர்.
3. அஸ்தம் முன்றாம் பாதத்தில் பிறந்தவர் பகைவர் போன்ற மனத்தை உடையவர், சிறு வயதில் தந்தையை இழக்கக் கூடியவர், பெரிய தந்திரசாலி வியாதியை உடையவர், வியாபாரி.
4. அஸ்தம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நன்னடைத்தை உடையவர், கொடையாளி, உயரமானவர், சந்தோஷி, மேன்மை, உடையவர், தாய்க்கு இனியவர், புகழ் உடையவர்

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். பலம் பொருந்திய உடல் உடையவர், அகன்ற மார்பை உடையவர், கடின நடையர், பிரிய வசனம் உடையவர், நல்ல குணம் உடையவர், தமோ குணம் உடையவர், எல்லோருக்கும் நண்பர், திடமான வாக்கு உடையவர், முகத்தில் மரு உள்ளவர், அற்ப நித்திரை உடையவர், அதிகம், செலவழிக்க மாட்டார், சூரன், துக்கம் உள்ளவர், முன்கோபி. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.
1. சித்திரை முதல் பாதத்தில் பிறந்தவர் பொல்லாத காரியங்கள் செய்பவர், கண்ரோகக்காரர், வியாக்கியானம் செய்பவர், சஞ்சாரி.
2. சித்திரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல வார்த்தைப் பேசுபவர், தன் உடம்பைக் கவனித்துக் கொள்பவர், தரித்திறர், உயரமானவர், தவம் செய்பவர், சஞ்சல மனம் உடையவர்.
3. சித்திரை முன்றாம் பாதத்தில் பிறந்தவர் கீர்த்திமான் பராக்கிரமசாலி வித்துவான், நல்ல நடத்தையுடையவர், அறிவுள்ளவர்.
4. சித்திரை நான்காம் பாதத்தில் பிறந்தவர் பகைவரை வணங்கச் செய்பவர், சுயபுத்தி உடையவர், வெற்றிடையவர்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். பலரிடத்திலும் பிரியமாக இருப்பவர், போஜனப் பிரியர், துடையில் மரு இருக்கும், தெய்வ பக்தி உள்ளவர், சுதந்திரத்தில் விருப்பம் உள்ளவர், ராஜ வேலைக்கு உரியவர். கல்விமான், பெற்றோரிடத்தில் அன்பு உள்ளவர், விசுவாசம் உள்ளவர், வலிமையான உடல் உள்ளவர், நேர்மையாகப் பேசுபவர், கையில் ஆயுதம் பிடிப்பவர், தியாகி. பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்
1. சுவாதி முதல் பாதத்தில் பிறந்தவர் , தீரன், கனவு காண்பவர், ஞானி, செல்வர்களிடம் நேசம் உள்ளவர், கல்வித் திறனும் பேச்சுத் திறமையும் உடையவர், சாது.
2. சுவாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் மனோதிடம் உள்ளவர், வாய் வார்த்தை ஜாலம்பேசுவார், புத்திசாலி, காரியவாதி. உண்மை, பேசுவார், அந்தரங்கக்காரர்.
3. சுவாதி முன்றாம் பாதத்தில் பிறந்தவர் வில்வித்தை விரும்புபவர், குரூர குணம் உடையவர், வஞ்சக எண்ணம் உடையவர், தீய வழியில் நடப்பவர், கலகம் செய்பவர்.
4. சுவாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் சொல் சாதுர்யம் உடையவர், கோபி, கலகத்தில் விருப்பம் உடையவர், ஒழுக்கம் உடையவர், துன்மார்க்கர், 

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். நீதிமான், நித்திரையில் விருப்பம் உடையவர், முகத்தில் மரு உடையவர், சுற்றத்தார்க்கும் அரசருக்கும் பிரியர், சொல் அடக்கம் உடையவர். நல்ல வார்த்தைகளை உடையவர். பொறுமையுடையவர், பெண்களின் விருப்பத்திற்குரியவர், தலை, மார்பு, இடுப்பு இவற்றில் மரு உடையவர், செல்வம் உள்ளவர், சதுர் வேதங்களிலும் நிபுணர், குணவான், முன்கோபி, தெய்வ வழிபாடு செய்பவர், வில், வாள் இவற்றைத் தாங்கும் வலுவுடையவர், யானை, குதிரை இவற்றைச் செலுத்துபவர், தியாக குணத்தையுடையவர். வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.
1. விசாகம் முதல் பாதத்தில் பிறந்தவர் வஞ்சகர், கல்விமார், ஜோதிடம் அறிந்தவர், சௌக்கியவார், புலவர், வியாபாரி.
2. விசாகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் தற்புகழ்ச்சிக்காரர், மந்திவாதி, உண்மை பேசுபவர், நீதிமார், ரோகி, சந்தோசம் உடையவர், நல்லவர்.
3. விசாகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், கள்ளன், குள்ளன், நல்ல காரியங்களை அறிந்தவர், அந்நியப் பெண்களிடம் விருப்பம் உள்ளவர், வாய்ஜாலக்காரர்.
4. விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் அரிய புத்திமான் யோகி, செல்வர், ஞானி, ஒருதாரம் உடையவர், உயரமானவர், வாய்ஜலக்காரர்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவனாய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவான வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள். நல்ல குணவான், தாம்பூலப் பிரியன், எல்லாராலும் புகழப்படுபவர், கண்ணியம் உடையவர், பக்திமார், நீதிமார், தூய்மையானவர், சிவந்த கண்களை உடையவர், மனிதர்களுள் சிறந்தவர், மானஸ்தர், பெண்களால் விரும்பப்படுபவர், அகன்ற மார்பை உடையவர், பெற்றோரை இரட்சிப்பவர், யானைபோன்ற வேகம் உடையவர், நல்ல வார்த்தைகளைப் பேசுபவர், செல்வம் உடையவர்,கோபி. உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.
1. அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தவர் நல்ல பதவியை உடையவர், நியாயக்காரர், சக்தியவார், ஆசாரக்காரர், மந்திரவாதி, செய்வோர்.
2. அனுஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் புல்லாங்குழலிசையில் பிரியம் உடையவர், நல்ல வாய்ஜாலம் உடையவர், சிறந்த புத்திமார், கருமி.
3. அனுஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்திமார், அழகர், மெல்லிய குரல் உடையவர், கல்விமான்.
4. அனுஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நச்சுச் சொல்லை உடையவர், ரோகி, மோசக்காரர், நாணயம் உடையவர்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சாமாளிக்க கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள விரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள்.வலிமை வாய்ந்தவர், துஷ்டர்களின் நண்பர், பொய் பேசாதவர், உபாயர், பக்தி உள்ளவர், கோபம் உள்ளவர், உள்மூச்சு உள்ளவர், புத்திமார், உயரமானவர், தமயரை ரட்சிப்பவர், சிற்றுண்டி பிரியர், அரசர்களுக்கு இனியவர், கண்கள் சிவந்து இருப்பவர், வலது புரத்தில் மரு இருப்பவர், கெட்ட சொல்லைத் திடமாகக் கொள்ளமாட்டார், பொய்யை மெய்யாக மாற்றும் திறமையுள்ளவர், நற்கேள்வி உள்ளவர், கடினச் சொல்லை உடையவர். கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
1. கேட்டை முதல் பாதத்தில் பிறந்தவர் எழுதவல்லவர், கர்வி, பரிகாசம், செய்பவர், விளையாட்டுச் செய்கை உடையவர், மகிழ்ச்சியுடைய மனம் உள்ளவர்.
2. கேட்டை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் சங்கீதப் பிரியன் வாய்ஜாலம் உள்ளவர், ஈகைக்குணம் உடையவர், சுகவார், போகி, கல்மனம் உடையவர், ரோகி.
3. கேட்டை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கண்நோய் உடையவர், பசு உடையவர், கலக்க்காரர், இழிந்த புத்தி உள்ளவர், அந்நியரின் தொழில்களைத் தனது என்று நினைத்துச் செய்பவர். சாது.
4. கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர் கலகம் செய்வதில் விருப்பம் உடையவர், முன்னோடி, வஞ்சகர், குரூரன், தன்குல மேன்மையைக் கூறுபவர்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிரயாணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்காள சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். மிக்க நித்திரைப் பிரியர், புறங்கால் அழகுடையவர், செய்யும் கருமங்களைக்குற்றம் இல்லாமல் செய்பவர், பக்திமார், ஆயுதத்தால் ஜீவிப்பார், தாய், தந்தையாருக்குப் பிரியர், தவநெறி உடையவர், சிறுதீனி தின்பவர், லோபி, கண் சிறுத்து சிவந்து இருப்பவர், கல்விமார், கொடுமையே செய்பவர், பந்துக்களைச் சேராதவர், முன்கோபி கொடியர். சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
1. மூலம் முதல் பாதத்தில் பிறந்தவர் கிழங்குவகைப் பொருட்களில் விருப்பம் உள்ளவர், பாபத் தொழில்களையே செய்பவர், ரோகி பித்தம் கொண்டவர்.
2. மூலம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் வித்வார், வயிற்று நோய், உடையவர், பொய் பேசுபவர், நல்ல புத்தி உள்ளவர், எல்லோரிடமும் இன்பம் உடையவர்.
3. முலம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பில்லி, சூன்யம், இவற்றில் ஆர்வம் உள்ளவர், புதிய கலைகளைக் கற்றுக் கொள்பவர், அழகுள்ளவர், சோம்பேறி, கருமி, நல்ல பழக்கங்களில் விருப்பம் உள்ளவர்.
4. மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நல்ல பலவான், காரியத்தில் வல்லவர், சாது, கோபத்தை அழித்தவர், ஞானி பகைவரை வெல்லுபவர், கழுத்தில் நோய் உள்ளவர்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்த நேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம் நயமான முறையில் பேசி சிக்கலான சமயங்களிலும் திறமையாக சமாளித்து விடுவீர்கள். அனைத்து காரியங்களிலும் திட்டமிட்ட செயல்படுத்துவீர்கள். உங்களது அனைத்து செயல்களும் எதிர்காலத்தை முக்கிய குறிக்கோளுடன் கொண்டதாக இருக்கும்.
திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். குறுகிய நெற்றி உடையவர், உயரமானவர், விசனம், உள்ளவர், வாசனைப்பிரியர், மன்னருக்கு நண்பர், உயர்ந்த பதவியை வகிப்பவர், சிற்றுண்டிப்பிரியர், தாய்க்கு விருப்பமானவர், தன்னை வந்தடைந்தவரை ரட்சிப்பவர், சிறிய சிவந்த கண்கள் உடையவர், நீண்ட கை, கால்களை உடையவர், அழகுடையவர், விசால மனம் உடையவர், கள்ளன், சூரன், வலிமையான கரங்களையும் தோள்களையும் உடையவர், பொய் சொல்லாதவர், பயணம் செய்வதில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு இனியர், தரும சிந்தனை உடையவர். சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
1. பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர் மிகுந்த வணக்கத்துக்கு உடையவர், குழந்தை பேறு இல்லாதவர், சச்சரவு உண்டாக்குபவர், சூரன், நடுவயது வரை ஆயுள் இருப்பவர்.
2. பூராடம் இரண்டாம பாதத்தில் பிறந்தவர் யோகி, அழகுள்ளவர், நண்பர்கள் இல்லாதவர், அறிவற்றவர், வேசிகளின் லோலர்.
3. பூராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சுகவார், செல்வம் உடையவர், வாலிப தசையில் தாயை இழப்பவர், பெரிய வியாதி உடையவர், நற்குணவார், தெளிவான சிந்தவனை உடையவர்.
4. பூராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் பலமில்லாதவர், முதுகு நோய் உள்ளவர், திருடன் அபவாதம் சொல்பவர், பலவான், துரோகி, தந்தையைச் சிறுவயதிலேயே இழப்பவனாயும் இருப்பான்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுப்பூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள். திறமையாக மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தராய் இருப்பீர்கள். பெண்களுக்கு இனிமையானவர், முகத்தில் மரு உடையவர், சரீரபலம் உடையவர், பலவார், புத்திமார், சுற்றத்தார்க்கு நல்லவர், நீண்ட மூக்கு, உடையவர், நல்ல வார்த்தைகளையே பேசுபவர், போஜனப்பிரியர், நீரைக் கண்டு அஞ்சமாட்டார், தர்மி, பிறர்பொருளை விரும்பமாட்டார், தூயவர், நல்லவர்க்கு நல்லவர், தியாகி. அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும்.
1. உத்திராடம் முதல் பாதத்தில் பிறந்தவர் அழகு வாய்ந்தவர், நல்ல புத்திசாலி, ஈகைத் தன்மை உடையவர், சகல விதமான சாஸ்திரங்களை அறிந்தவர், குருசை உபசரிப்பவர்.
2. உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல வாக்குச் சாதுரியம் உடையவர், உலோபி, தற்பெருமை பேசுபவர், திடவான், மேன்மையான கருமங்களை ரகசியமாக செய்பவர்.
3. உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் கல்விமான் பெரு நோக்காய்ப் பேசுபவர், குரூரமானவர், கலங்கிய மனத்தை உடையவர், கோபி, பருத்த தேகத்தை உடையவர்.
4. உத்திராடம் நான்காம் பாதத்தில பிறந்தவர் தைரியம் வீரியம் உடையவர், தரும்ம் செய்பவர், விசேஷ செயல்பாடு உள்ளவர், வியாபாரி, சுற்றத்தார்களிடத்தில் அன்புள்ளவர்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியான நேரத்திற்கு உணவருந்த மாட்டீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். சுத்தமான ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். கல்வி உடையவர், ஒரு வழிப் போக்கர், விரைவில் கோபம் வந்து உடனே மாறும் குணம் உடையவர். முன்னும் பின்னும் பார்த்து நடப்பவர், உயர்ந்த உள்ளங்கால்களை உடையவர், பெண்களுக்கு இனியவர், வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர், மயிர் அழகர், உற்சாக முடையவர், சிக்கனத்தை கடைபிடிப்பவர், ஈகை குணம் இல்லாதவர். தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.
1. திருவோணம் முதல் பாதத்தில் பிறந்தவர் புத்திசாலி, தூயதேகத்தை உடையவர், பிள்ளைகள் இல்லாதவர், போகி, நிலைபெற்ற உற்சாகி, கலகக்காரர், கர்வி.
2. திருவோணம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் பிரும்ம ஞானி, கருமி, தயவு தாட்சண்யம் இல்லாதவர், லோபி சிநேகம் இல்லாதவர்.
3. திருவோணம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பிரும்ம கருமி, ரோகி, போகி, செல்வம், உடையவர், உதார குணம் உடையவர், தயவற்றவர்.
4. திருவோணம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் வேசி லோலன், சீலம் உடையவர், தருமம் புகழ் உடையவர், தனவான், பயிர் செய்பவர்

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர். உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவீர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பீர்கள். நெறியான தொழிலைச் செய்பவர், ஒருவருக்கும் பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமான நாசி உடையவர், ஒருவர் சொல்லையும் பொறுக்கமாட்டார். மாமிச பட்சண பிரியர், பெற்றோருக்கு விருப்பமானவர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உடையவர், அழகர், அறிவாளி, பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார்கள். செல்வவளமும் மக்கள் செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும். கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர். மனோதிடம் பெற்றிருப்பர். கோபம் இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிப்பர்.
1. அவிட்டம் முதல் பாதத்தில் பிறந்தவர் காமி, பசி, பொறுக்க இயலாதவர், மனக்கிலேசம் உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம் உடையவர், கறுப்பு நிறம் உடையவர்.
2. அவிட்டம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சி உடையவர், சாஸ்திரவாதி, தருமம் உடையவர், தரித்திரம் உடையவர்.
3. அவிட்டம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் குணசீலன், இளைத்த உடல் உடையவர், திடமான மனம் உடையவர், நல்ல நடத்தை உடையவர், சிவந்த நிறம் உடையவர்.
4. அவிட்டம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் தனவான், குரூரன், ஸ்தூல தேகத்தை உடையவர், கர்வி, வஞ்சகன், மயிர் அழகுள்ளவர்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமான சொற்களை பொறுக்கமாட்டார். ரோகம் உடையவர், இனியவர், பக்திமான், கை, கால் வலுவுள்ளவன், அழகிய வாயை உடையவர், பொய் பேசமாட்டார். அரசர்க்கு இனியவர், நீராடுவதில் விருப்பம் உடையவர். பகைவரை வெல்பவர், செல்வம் உள்ளவர், வழக்கு உரைப்பவர். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.
1. சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர் குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின் மேல் அன்புடையவர்.
2. சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், கிலேசம் உடையவர், வஞ்சகன். ஆசாரம் அற்ற இழிந்த குலத்தவர்.
3. சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல காரியங்களை எல்லாம் முடிப்பவர், பசி உள்ளவர், வயிற்றுநோய் உள்ளவர், பித்தன், சேவக விருத்தி செய்பவர், புத்திமான்.
4. சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நஷ்டத்தை உணர்பவர், நினைத்த காரியத்தை முடிப்பவர், நல்லவர், சுகவான்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள்.
உங்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பிறர் சொல்லைப் பொறுக்க மாட்டார், வழக்குரைப்பார், பால், நெய், இவற்றில் விருப்பம் உடையவர், பெண்களுக்கு கவுரவம் வழங்கமாட்டார். கல்விமான், ஆசி கூறுபவர், அழகுடையவர், பக்திமான். மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.
1. பூரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் பிராமணர், அகன்ற முகத்தை உடையவர், பலவான், மனைவிமேல் பிரியம் உடையவர், சண்டை செய்வோன், நல்லுணர்ச்சி உடையவர், சுகவான்.
2. பூரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் கடவுள்மந்திரம் அறிந்தவர், உண்மை தளராதவர், யாரிடமும் சென்று வணங்கிக் காரியத்தை முடிப்பவர்.
3. பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் சந்தோஷம் உள்ளவர், பொறுமை, நல்ல நடத்தையுள்ளவர், புலவர், அயலாளிகளின் வீட்டுப் போஜனத்தில் விருப்பம் உடையவர்.
4. பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் குணவான். சத்தியவான், குள்ளன், நட்புள்ளவர், நல்ல தொழில் உள்ளவர், சீமான்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பீர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க்கூடிய மனநிலையை வளர்த்துவிரும்புவீர்கள். மற்றவர்களிடம் உண்மையான உழைப்பையும் நேர்மையான செயல்களையும் எதிர்பார்ப்பீர்கள். உங்களது நேர்மையான செயல்பாடுகளால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை அதிகரித்து கொள்வீர்கள். மிகுந்த சுற்றத்தாரை உடையவர், கோள் சொல்லும் குணம் உடையவர், நீதிமான் பிறருக்கு உதவி செய்பவர், வித்தையில் விருப்பம் உடையவர், தாம்பூலப் பிரியர், நாடுகள் சுற்றுபவர், பரந்த காதும், பரந்த மார்பும் உடையவர், புத்திமான், பெண்களுக்கு இனியன், பொய்யன், பிறர் தொழிலை விரும்பி செய்பவர், நல்லவருக்கு நல்லவர். வழக்கை தொடுப்பதில் பலவான்.
1. உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர் நிறைந்த உடல் உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் ரோஷம் உடையவர், சாது, தரித்திர்ர், நல்ல குணவான், நல்ல நடை உடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள் பக்தி நிறைந்தவர், முன்கோபம் உடையவர், எல்லா நேரத்திலும் இன்பத்தோடு இருப்பவர், கலகம் மூட்டுவர்.
4. உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் புலவர், சொல்லில் வாட்டம் உடையவர், பேதி உடையவர், குடும்பி, கோபி, கிலேசம் உள்ளவர்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிராயணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். பெண்களிடம் பிரியம் உடையவர், பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்ல குணவான், அழகான கண்களை உடையவர், வாய் சாதுரியர், பிராமணர்களை வணங்கும் பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்கு இல்லையென்று கூறாதவர், பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டான்.
1. ரேவதி முதல் பாதத்தில் பிறந்தவர் கலகப்பிரியன், நிபுணன், வித்துவான், கிலேசன், சந்தோஷி.
2. ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் திருடன், தீரன், சௌக்கியவான், கோபி, கருமி, சஞ்சலம் உடையவன், மெலிந்த சரீரம் உடையவன்.
3. ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்தியற்றவன், பாபி, வஞ்சக குணம் உள்ளவன், தரித்திறன், நல்ல குணம் இல்லாதவர்.
4. ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் தீரன், சத்தியம் பேசுபவர், இழிந்த குலத்தவர், சுகவான், பகைவரை வெல்பவர்.