Wednesday 29 October 2014

கோச்சார ராசிபலனும் - தனி மனித ஜாதகமும்

கோச்சார  ராசிபலனும் - தனி  மனித  ஜாதகமும்

ஒவ்வொருவரும் பிறந்த  பொழுது ( நாள், நேரம், ஊர்  அடிப்படையில் )  உள்ள  கோள்சார  நிலையை கொண்டு ஜாதகம் கணிக்கபடுகிறது, இலக்கினம் என்னும் மைய புள்ளியை கொண்டும், பாவக மற்றும் கோள்களின் நிலையை  கொண்டும்   விதியை  அறிந்து கொள்ளலாம்.

தசா புத்தி  பலன் 

இதில் சந்திரனின்   இருப்பு நிலையை  கொண்டு தசா புத்தி மூலம் ஜாதகருக்கும் வாழ்வில் ஏற்படும்  கல்வி, செல்வம், புகழ், வீடு, வாகனம், நோய்,  திருமணம், கண்டம், பாக்கியம், தொழில், லாபம், நஷ்டம்  இன்ப-துன்பங்கள், வளர்ச்சி-வீழ்ச்சி,  என்பன உள்பட்டவைகள்   எப்பொழுது,  எவ்வாறு  நடக்கும் என்றும் அறிந்து கொள்
லாம்.   இவையே ( தசா புத்தி ) பிரதான அமைப்பு

கோள்சாரம் பலன் 
 
ஜாதகர் பிறக்கும் பொழுது  சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜென்ம  நட்சத்திரம்  ஆகும்,  ஜென்ம நட்சத்திரம் எந்த ராசியில் அமைகிறதோ அதுவே ஜாதகரின் ஜென்ம ராசியாகிறது. இதன் அடிப்படையில்  ராசி மண்டலத்தில்  நகர்ந்து கொண்டிருக்கும்  கோள்கள்  ஒவ்வொரு  ராசிக்கும் மாறி கொண்டிருக்கும் நிலையை கொண்டு  ஒருவருக்கும் ஏற்படும் நன்மை-தீமைகளை   ஆண்டு, மாத, வார, நாள்  பலன்களாக கூறுவது  கோச்சரா பலன்  இவை  இரண்டாம் நிலை

இவற்றில் தசா புத்தி  அமைப்பை பற்றி ஜோதிடம்  அறியாத பெரும்பாலோருக்கு  தெரிவதில்லை, ராசி  அடிப்படையில் பார்க்கப்படும்  கோச்சார  பலனை பிரதானமாக கவனத்தில் கொள்கின்றனர்.


இதில் மெதுவாக நகரும் கோள்களான  சனி, ராகு, கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சி பலன்களே பிரதானம்,  இவைகளே  நாளேடு, வார, மாத  பத்திரிகைகளில் வருகிறது , அதனை அறிந்து கொள்வதை  மக்கள் விரும்புகின்றனர்.

இங்கு கவனிக்க வேண்டியவை கோச்சார ராசி பலன் என்பது உலகில்  இருக்கும்  மொத்த மக்கள் தொகை  720 கோடி, இதில் ஒரு ராசிக்கு 
60 கோடி மக்கள் என  பொதுவாக வரும், ஒரே ராசியில் பிறந்த அனைவருக்கும் ஒரே  பலன்களாக நடக்க  வாய்ப்பில்லை,   ஆனால்  அவரவரின்  ஜாதக அமைப்பின்படி திசா புத்திகளை பொருத்து  அதிகரிக்கும்- குறைக்கும்.

திசா புத்தி  சுமார்  முக்கால் பங்கு (
75%
)  என்றால்,  கோச்சார பலன் கால் பங்கு ((25%) என கொள்ளலாம்.

திசா புத்தி நன்றாக இருந்தால்  கோச்சார  தீமையை  சமாளிக்கும் நிலையை  தரும்,  திசா புத்தி தீமையாக  இருந்து கோச்சாரம்   நன்றாக   இருந்தால் அந்த காலம் சற்று ஆறுதாலாக  இருக்கும்.

திசா புத்தியும், கோச்சரமும்  நன்மையாக இருந்தால்  அது  ஒரு பொற்காலம்,  திசா புத்தியும், கோச்சரமும் தீமை தரும் அமைப்பில் இருந்தால் சொல்ல வேண்டியதில்லை, சற்று கடினமே.

எனவே பொதுவான ராசி பலன் அமைப்பை மட்டும் பார்க்காமல் அவர்வர்  சுய ஜாதக   அமைப்பை  கருத்தில் கொள்ள வேண்டும்.

தின, வார, மாத, ஆண்டு  மற்றும்  கோள்களின்  பெயர்ச்சி பலன்களை  பார்ப்பது  தவறில்லை,  ஆனால் அவற்றை மட்டுமே பிரதானமாக கருத  வேண்டாம் என்பதே  இந்த பதிவின் நோக்கம். ஏனென்றால் ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை  வாய்ந்தது.

நன்றி
ஆஸ்ட்ரோ கண்ணன்

Monday 20 October 2014

தீபாவளி (தீப ஒளி) திருவிழா பெயர் காரணம் ?

  தீபாவளி (தீப ஒளி) திருவிழா  பெயர் காரணம் ? 



சுவாமி  விவேகானந்தர்  கூறியது  உலக மதத்திற்கெல்லாம்  தாய்  மதமாம்  இந்து  சமயம் என்பது,   நமது சமயத்தில் இறைவடிவமும்   சரி, வழிபாடுகளும் சரி பல்வேறு  வகையில் பின்பற்றுகின்றோம்,  இந்து  சமயத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு  பண்டிகைகளுக்கும்  பின்  ஒரு புராணகதை உண்டு, இதன்படி  இறவனை ஒளியை கொண்டு  வழிபடும் திருவிழாவில் பிரதானமாக  வருவது   தீபாவளி  பண்டிகை  ஆகும்.



பொதுவாக  தீபாவளி  என்பது பகவான் கிருஷ்ணன், நரகா சுரன் என்ற  அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக் கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதா ல், தீபாவளி என்னும் பண்டிகையை கொண் டாடுவதாக கூறப்படுகிறது  என்பது  அனை வரும்  அறிந்தது, எனினும் தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.







தீபாவளிஎன்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிட வேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது.


இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்ல ப்படுகிறது.இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது




அன்னை சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.



அனைவருக்கும்   இனிய  தீப ஒளி  திருநாள் வாழ்த்துகள்   

நன்றி 
ஆஸ்ட்ரோ கண்ணன்

Wednesday 15 October 2014

ஜோதிடத்தின் வரலாறு


          

                       

ஜோதிடத்தின் வரலாறு கடவுளின் படைப்புக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. கார்க முனிவர், ஜோதிடவியல் படிப்புக் கடவுளாலேயே எடுத்துரைக்கப் பெற்றது என்றும் பிரம்மன் அதைப் படைத்த போதே தமக்கு அருளியதாகவும் கூறுகிறார். கார்க முனிவரிடமிருந்து மற்றைய முனிவர்கள் கற்று உலகம் எங்கும் பரப்பினார்கள்.மேலை நாடுகளில் (கிமு 3769 ல்) சேத் என்பவர் உலகத்தின் முதல் ஜோதிடர் என்ற நம்பிக்கை உள்ளது. அராபியர், எகிப்தியர், பாரசீக ஜோதிடர்கள் எழுதிய ஜோதிட நூல்களில் இருந்து இது அறியப்படுகிறது. கிரகங்களின் சுற்றும் வழியையும் அவைகளின் வேகத்தையும் சேத் என்பவர் முதல் முதலில் ஆராய்ந்து அறிந்தார் என்று மேலை நாட்டினர் நம்புகிறார்கள். விண்ணில் கிரகங்கள் செல்லும் விதியை 12 சரிசம பாகமாக அவர் தான் பிரித்தார், ஏனெனில் சூரியன் விண் வெளியில் ஒரே பாதையில் ஆண்டு முழுவதும் செல்கிறது என்று அவர்கண்டார். மேலும் சூரியனின் வட்ட பாதை ஆ ண்டு பனிரெண்டு பௌர்ணமிகளை கொண்டதாகக் கண்டார். பௌர்ணமி 1 மாதத்திற்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆகவே சூரியன் செல்லும் பாதை பன்னிரண்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இவைகளுக்குப் பெயர் மஸ்ஸரோத் என்பது, நம்மால் இராசி அல்லது சூரியன் மாளிகை என்றழைக்கப்படுகிறது.



சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன், சாஸ்டியன் நாட்டு குருமார்களும் ஆட்டிடையார்களும் இவ்வறிவிய லைக் கருத்தூன்றி படித்து இதை வளர்த்தார்கள். இந்தக் காலம் ஜோதிடத்தின் பொற்காலம் ஆகும். ஏனென்றால், அவர்கள் கிரகங்களின் எல்லா விதமான இயக்கங்களையும் நிகழும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளுடன் மானிட வாழ்க்கையில் தொடர்புபடுத்தினர். 

அக்கேடியர்களும் சுமோரியர்களும் விண்ணயையும் விண் வாய்ந்த பொருள் தொகுதிகளையும் கூர்ந்து கவனித்து அவைகளுடைய பாதைகளைக் கணித்தார்கள். பாபிலோனியர்களும் எகிப்தியர்களும் பூமியிலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் மீது கவனம் செலுத்தினார்கள். ஜோதிடம் , பணக்காரர், குருக்கள், அரசர்கள் இவர்களிடையே செல்வாக்கும் பெற்றது. மெஸ்ப்ரோ என்பவர் தம் காலத்தில் ஜோதிடம் இல்லத் தலைவியாக இருந்தது என்று கூறுகிறார்.



புராண காலத்தில் சாஸ்டிய நாட்டில் ஜோதிடம் தோன்றியது என்று சிலர் கருதுகின்றனர். சால்டியர் என்றால் ஜோதிடம் என்று பொருள் என்கிறார்கள். சால்டியர்களின் பொதுக் கருத்துக்களைப் பித்தகோரியஸ் முன்னேற்றினர். அவர்கள் மேம்பட்ட கணிதத்தை பயன்படுத்தினர். பின்னர் ஜோதிடம் கிரேக்கர்களின் கைகளுக்கு மாறியது. அவர்களுக்கு ஆழமான மதநம்பிக்கையும் ஆராயும் மனப்பான்மையும் அவர்களிடமிருந்ததால் பிறப்பு ஜோதிடத்தில் அதிக கவ னம் செலுத்தினர்.



நான் யார், நான் ஏன் பிறந்தேன், நான் எதற்காக வாழ்கிறேன், என் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ( உயர்வு, தாழ்வு நிலையில்) உள்ளன என்பவை அவர்களு டைய கேள்விகளில் இடம் பெற்றன. இவைகளுக்கு விடைகள் ஜோதிடத்தின் மூலமே கிடைத்தன. நனிவே, பாபிலோன் நாட்டின் பழக்கால ஜோதிடர்களுடைய அனேக ஆவணங்கள், பட்டயத்தகடுகளில் ஆங்கிலேயரின் அருங்காட்சிச் சாலையில் காண்ப்படுகின்றன. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் ஏக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்.



கிரேக்கர்களும் ஜோதிடத்தைப் பின்பற்றுவதில் ஊக்கமுடையவராக இருந்தனர். அவர்கள் பிறப்பு  ஜாதக த்தைக் கணித்து அந்தப் பிறப்பு நேரடிப்படி அந்த நபர்களின் பண விஷயங்கள் குடும்பம், விதி, அதிர்ஷ்டம் வருங்காலப் பலங்கள் இவைகள் முன் கூட்டியே தெரியப்படுத்தினர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பாப்பிரஸில் எழுதி கணிக்கப் பெற்ற கிரேக்கிய ஜாதகம் உள்ளது. ஜோதிடத்தைக் கற்ற சால்டியர்கள் பெருமைமிகு அலெக்சாண்டரின் காலத்திலேயே புகழ் பெற்றிருந்தனர்.



எகிப்தியர்களும் ஜோதிடத்தில் முக்கியமாக அக்கறை கொண்டு இருந்தனர். அவர்களுடைய நாட்டின் வருங்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றிருந்தனர். நினைவுச் சின்னங்கள் கல்வெட்டு க்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மூலம் இக்கலை கிமு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அறியவும். பாரோக்கள் (எகிப்திய அரசர்கள்) ஜோதிடங்களை மிகவும் மதித்தனர். அவர்களுக்குத் தலைவராக பாபிலஸ் என்ற ஜோதிடர் விளங்கினார் அவருக்கு வேலை என்னவென்றால் அரசருக்கு யார் எதிரியாகக் கூடும், சக்ரவர்த்திக்கு யார் தொல்லை தரக்கூடும் என்பதைச் ஜாதகங்கள் மூலமாகக் கண்டிபிடிப்பதுதான். எப்போதாவது பாபிலஸ் அப்படிப்பட்ட ஜாதகரை முன்னதாக அறிந்தால், அதனை அரசருக்குத் தெரிவிப்பார். அரசர் அவரைக் கொன்று விடுவார். பாரோக்கள் ஜோதிடர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தனர். அடிக்கடி அரசரின் கனவுகளுக்கு விளக்கம் தரும்படி அவர்க்ளைக் கலந்து ஆலோசிப்பர்.



பெர்சியாவில், அரசர்கள் ஜோதிடர்களை அவர்களுடைய பரந்த அறிவியல் புத்திசாலித் தனத்திற்கு மதிப்புக் கொடுத்து கௌரவித்தனர். முகமது நபினாயகரின் சரியான பிறக்கும் நேரத்தை முன் கூட்டியே உ ரைத்தால் பெர்சிய அரசவையில் இருந்த ஜோதிடம் ஒருவருக்கு அல்ஹகீம் (கற்றறிந்தவர் என்று பொருள்) என்ற ஞமாஸ்ப் பட்டம் வழங்கப்பட்டது. சார சென்ஸ் கி.பி 711ம் ஆண்டில் இந்த விஞ்ஞானத்தை ஸ்பெயின் நாட்டில் பரப்பினர். வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன் இனத்தவர் 1237ல் இந்த அறிவியலை ஐரோப்பாவில் பரப்பினர். சீன நாட்டில் கி.மு 2752 வாக்கில் போகி அரசர் காலத்தில் இருந்து ஜோதிடம் படிப்பதற்காக மட்டுமே, வானசாஸ்திரத்தை முன்னேற்றம் அடையச் செய்ததாக டாக்டர்.ப்ருஸ்டர் ஒப்புக் கொள்ளுகிறார். ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமைமிக்க ஜோதிடர்களாலேயே சீனச் சக்ரவர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கி.மு 2513 ஆம் ஆண்டில் கியன் என்பவர் இந்த முறையிலேயே அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மாவீரர்  அலெக்சாண்டர்  தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம்முடன் கலிஸ்தினிஸ் என்ற வான சாஸ்திரியையும் அழைத்துச் சென்றார். கிழக்கிந்திய நாடுகளிலும் இந்த விஞ்ஞானத்தைப் பரப்பினர். இந்தியாவுக்கு அவர் வந்த போது இக்கலையை மேலும் கற்றுக்கொண்டார். தம் நாட்டில் இதை அபிவிருத்தி செய்ய அது உதவிகரமாய் இருந்தது. 38 வயதே ஆன 1486 ல் பிறந்த ஹென்றிகார்னலியஸ் அக்ரிப்பா என்னும் ஜோதிடம் பிரான்சின் மன்னர் முதலாம் பிரான்சிஸ்க்குச் ஜோதிடராக இருந்தார். எலிசபெத் இராணியின் மதிப்பைப் ஜோதிடர் ஜான்டீ பிலாவைச் சேர்ந்த அபுமெஸார் என்பவர் பெற்றார் பாக்தாதில் தேசிய ஜோதிட இயலுக்கு பேராசிரியராகத் திகழ்ந்தார். பழமை வாய்ந்த ஜோதிட நூல்களை அராபிக்மொழியில் காலிப்மம்மன்னோராஷ்ட் என்பவர் மொழி பெயர்த்தார்.



ஆக எல்லா நாடுகளும் இந்த அறிவியல் திறனில் மதிப்பு வைதிருந்தது துல்லியமான பலங்களைக் கூறும் தொழில் நுட்பத்திற்கு வேண்டிய அனுபவங்களையும், முடிவுகளையும் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களிடம் கற்றறிந்து கொள்ளுவது சிறந்தது. இந்த அறிவியலை விருத்தி செய்து வழங்கியவர்கள் ஜோதிடத்தில் வல்லுனர்கள் என்பது மட்டுமன்றி புகழ் பெற்ற வானசாஸ்த்திரிகள் சரித்திரக்காரர்கள், தத்துவஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கவிஞர்கள் ஆவர்.

Monday 13 October 2014

பாதகாதிபதியும் 12 இலக்கினமும்


பொதுவாக சாதகம் ,  பாதகம்   என்ற  இந்த இரு சொற்களின் பொருள்   நேர் எதிரானவை,  ஒரு விடயம்   நமக்கும்,  நம்மை சார்ந்த அனைத்திற்கும்  நன்மை,  வளர்ச்சி,  முன்னேற்றம்   தரும்  வகையில் இருந்தால் அது  சாதகமான  அமைப்பு என்றும்,  அதே விடயம்   நமக்கும்,  நம்மை சார்ந்த  அனைத்திற்கும்  தீமை, தடை, பின்னடைவை  தரும்  வகையில் இருந்தால் அது 
பாதகமான  அமைப்பு என்றும் கருதுகிறோம்.

ஜோதிட ரீதியாக  ஒருவருக்கு  எற்படும்  கடன், நோய், எதிர்ப்பு  போன்ற துன்பங்களை  6ம் பாவகம் குறிக்கிறது. கண்டம், விபத்து , மரணம்  போன்ற துன்பங்களை  8ம் பாவகம் குறிக்கிறது.  நஷ்டம், இழப்பு, மறைந்து வாழ்தல்  போன்ற துன்பங்களை  12ம் பாவகம் குறிக்கிறது.

இந்த முன்று  பாவகங்கள், இதன் அதிபதிகள், இதில் அமர்ந்த கிரகங்கள் ,  அதிபதிகளின்    நட்சத்திரத்தில்  அமர்ந்த கிரகங்கள் அதிபதிகளின்  பார்வை  போன்ற  இன்னும் பல  காரணிகள் மூலம் துன்பங்களை  அனுபவிக்கும் நிலை உள்ளது.

ஆனால்  இவர்களை எல்லாம் மிஞ்சும்  அமைப்பில் வருபவர் ஒருவர் உண்டு  என்றால்  அவரே பாதகாதிபதி.

எந்த ஜாதகத்திலும்  இலக்கினாதிபதியை விட பாதகாதிபதி வலு பெற்றால்  சொல்ல வேண்டியாதே  இல்லை, சொல்லான துயரத்தினை தருவார்  அவருடைய  திசா புக்தியில்,

6,8,12 ம்  பாவக அதிபதிகள்  கூட  சில  குறியீடுகள்  மூலம் அவர்களின்  தன்மையை  முன்னேரே  காட்டிவிடுவர், உதாரணத்திற்கு  ஒருவருக்கு நோய்  வருகிறது என்றால் அதன் வெளிப்பாடு  சிறிது  அளவேனும்  தெரிந்துவிடும்,மருத்துவமனைக்கு   சென்று  பரிசோதனை செய்து  தேவையான சிகி ச்சையை  பெற்று   கொள்கிறார்,  பின்னர்  நோயின்  தன்மையை  பொருத்து  குணமாக  காலத்தை எடுத்து கொள்கிறது.

பாதகாதிபதியோ  உடன் இருந்து குழி பறிப்பு,   நண்பர்களும்  எதிரியாவது, ,நம்பிக்கை துரோகம்,  எதிர்பாரா  துன்பம், விழ்ச்சி   என  ஒரேயடியாக   அதல பாதாளத்திற்கு  கொண்டு   சொல்லும் வேலையை  திறம்பட செய்வதில் வல்லவராக இருப்பார்.

அதிலும் பாதகாதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம்  பெற்றாலும், இலக்கின பாவிகள் தொடர்பு ,   6,8,12  ம் பாவக
அதிபதிகள் தொடர்பு பெற்று விட்டால்  தன்னுடைய பணியை திறம்பட செய்வார்.

இந்த பாதகாதிபதியால்   நன்மையே  இல்லையா ?
பாதகாதிபதியால்  ஏற்படும் துன்பம் குறைந்தாலே  நன்மை  தானே ! பொன், பொருளொடு  வழிப்பறி திருடனிடம்  அகப்பட்டவன் அவற்றை  இழந்தாவது உயிரை  கைப்பற்றி கொள்ள தானே கருதுவான்

இதற்கு  பாதகாதிபதி நீசம், பகை, மறைவு, அல்லது  இலக்கின சுபரின் சாரம்  ஆகிய நிலைகளில்  இ ருக்க வேண்டும்,

இவையெல்லாம்  பா
காதிபதியின் பொது தன்மை

பாதகாதிபதிகளை சர, ஸ்திர, உபய  அடிப்படையில் பிரித்துள்ளனர் நம்முடைய முன்னோர்கள்

சர  இலக்கினத்திற்கு  11ம்  அதிபதி
ஸ்திர  இலக்கினத்திற்கு  9 ம்  அதிபதி
உபய இலக்கினத்திற்கு  7 ம்  அதிபதி

 
மேஷம், கடகம், துலாம், மகரம்  இலக்கினங்களு க்கு  11ம்  பாவக  காரகமான  நண்பர்கள், மூத்த ச கோதரம்,  லாபம், வெற்றி  மூலம்   பாதகத்தை செய்வார்

ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்   இலக்கினங்களுக்கு  9ம்  பாவக  காரகமான  தந்தை வழி, பயணம், பிறருக்கு உதவுதல் (தருமம் )  பொதுப்பணி   மூலம்   பாதகத்தை செய்வார்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம்   இலக்கினங்களுக்கு  7ம்  பாவக  காரகமான  மனைவி, தொழில் கூட்டாளீகள், வியாபாரம்   மூலம்   பாதகத்தை செய்வார்.

இதில் சர லக்கினங்களுக்கு  11ம்  அதிபதி பகை கிரகமாக தான் வரும்,  எனவே பாதகம் சற்று வலிமையாக இருக்கும்.

ஸ்திர  லக்கினங்களுக்கு  9ம் அதிபதி நண்பர்களாக  தான் வரும்,  மேலும்  திரிகோனாதிபதியாக  இ ருப்பதால்  பாதகம் சற்று குறைவாக  இருக்கும்.

உபய   லக்கினங்களுக்கு 7ம்  அதிபதி  பகை கிரகமாக இருப்பதால்  பாதகம்  மற்ற  இரண்டு பிரிவுகளை (சர, ஸ்திர ) விட  சற்று அதிகமாக , அதாவது வலிமையான பாதகமாக   இருக்கும்.


இலக்கினம்  -  பாதகாதிபதி 
மேஷம்           -  சனி
ரிசபம்              - சனி
மிதுனம்          - குரு
கடகம்              - சுக்கிரன்
சிம்மம்            - செவ்வாய்
கன்னி              - குரு
துலாம்           -  சூரியன்
விருச்சிகம் -  சந்திரன்
தனுசு             -  புதன்
மகரம்            - செவ்வாய்
கும்பம்          - சுக்கிரன்
மீனம்             - புதன்
 

பன்னிரு இலக்கினங்களுக்கும்  பாதகாதிபதிகள் எவ்வாறு, எந்த வகையில் பாதகத்தை தருவர் என்று  இலக்கின ரீதியாக இனி  வரும் பதிவுகளில் ஆராய்கிறேன்.

நன்றி
அஸ்ட்ரோ கண்ணன்

Monday 6 October 2014

கிரகணம் குறித்த விளக்க பதிவு

 




ஒவ்வொரு ஆண்டும்  இப்பூவுலகில்  நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும்  ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர  கிரகணம் கூட சம்பவிக்கும்.

ராகு, கேது  என்ற இரு கிரகமும்  சூரிய கிரகணம்,  சந்திர கிரகணம்  ஏற்பட  காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில்  இந்த இரு கிரகங்களும்  சாய  கிரகங்கள்  என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும்,  விண்வெளியில்  சூரியனது வட்டப்  பாதையும்  சந்திரனது  வட்டப்பாதையும்  வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என  அழைக்கப்படுகிறது.


சூரிய கிரகணம்  அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி  அன்றும்  சம்பவிக்கும்,

சூரிய கிரகணம் 

ஜோதிட  சாஸ்திரபடி  பன்னிரண்டு ராசிகளை  சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது  இருவரும் ஒரே  ராசியில் குறிப்பிட்ட   பாகை  கலை  அளவில் சேர்ந்திருக்கும்  பொழுது  அமாவாசை ஏற்படுகின்றது,  "அமவாஸ" என்ற வடமொழி  சொல்லுக்கு  ஒன்றாக இருத்தல்  என்று  பொருள், சூரியனும், சந்திரனும்  ஒன்றாக  குறிக்கும் "அமவாஸ"  என்னும் சொல்  அமாவாசை என்றானது.

அமாவாசை அன்று  சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க  இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ  அல்லது  கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
 
சந்திர கிரகணம்

பெளர்ணமி  அன்று  சூரியனும் சந்திரனும் சற்றேறக் குறைய 180 பாகை  வித்தியாசத்தில்  இருப்பார்கள், அதாவது  சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருக்கும்.

பெளர்ணமி  அன்று  இவ்விருவரும்  ராகு அல்லது கேதுவின் பிடியிலே இருக்கும் போது  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.




அறிவியல்ரீதியாக  சூரியன், பூமி, சந்திரன்  ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது  சந்திரனை  பூமியின்  நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே  சந்திர கிரகணம் ஆகும்.    

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக  ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும்  அழைக்கப்படுகிறது.

சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.


பஞ்சாங்களில்  கிரகணத்தை  பற்றி குறிப்பிடும் போது ஸ்பரிச காலம்,  நிமீலன காலம், மத்யகாலம்,  உ ன்மீலன காலம்,   மோக்ஷ  காலம்  என ஐந்துவித கால முறைகளால் குறிக்கபட்டிருக்கு
ம். 

 ஸ்பர்ச காலம்  என்றால் கிரகணம் ஆரம்பமாகும் நேரமாகும் , நிமீலன காலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைந்து  கண்ணுக்கு தெரியாமல் போகும்  நேரமாகும்,  மத்யகாலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைய  ஆரம்பித்த  நேரத்திற்கும்  மீண்டும் தெரிய ஆரம்பித்த நேரத்திற்கும்  மத்தியில் உள்ள  நேரமாகும், உன்மீலன காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடியிலிருந்து  சந்திரன் வெளிபட்டு  கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்  நேரமாகும். மோக்ஷ  காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடி யிலிருந்து  சந்திரன்  முழுவதும் விடுபட்டு  கண்களுக்கு தெரிய  ஆரம்பிக்கும்  நேரமாகும்.

கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில்  தாய், தந்தை  மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது,  மறுநாளே  இதை செய்ய வேண்டும்.

கிரகணம் பிடித்திருக்கும்  காலத்தில் திருக்கோவில்கள் நடை அடைக்கப்படிருக்கும். கர்ப்பிணி பெண்கள்  வீட்டை விட்டு  வெளியே வரக்கூடாது  என்றும்  சாஸ்திரம் கூறுகிறது.

எந்த நட்சத்திரத்தில்  கிரகணம்  சம்பவிக்கின்றதோ அந்த  நட்சத்திரம் அதற்கு முன், பின்  உள்ள நட்சத்திரங்க்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.

வரும் 08-10-2014  புரட்டாசி மாதம் 22  புதன்கிழமை  அன்று மதியம் ரேவதி நட்சத்திரத்தில்  கேது கிரகஸ்த  சந்திர கிரகணம்  ஏற்படும், இது  இந்தியாவில் தோன்றும்.

ஸ்பரிசம்  : 2.48 P.M,   மத்யம் : 4.29 P.M,   மோக்ஷம்  : 6.09 P.M,
 
உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, ஆயில்யம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.

நன்றி 
ஆஸ்ட்ரோ  கண்ணன்

Wednesday 1 October 2014

லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம்


அனைவருக்கும் சரஸ்வதி பூஜை  மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்

இந்த  நவராத்திரி  விழா நேரத்தில் முப்பெரும் தேவியரின் பெயரில் அமைந்துள்ள சிறப்பு யோகங்களான லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம் ஆகியவற்றை  பார்ப்போம்.


லட்சுமி யோகம்  
ஜாதகத்தில்   இலக்கினத்திற்கு   ஒன்பதாம்  அதிபதி மற்றும் சுக்கிரன்  கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும்   ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.

செல்வத்தின்  அதிபதியான  லட்சுமி தேவியை  குறிக்கும்  சுக்கிரகோளின்  வலிமையை   கொண்டு   இந்த யோகம்   விவரிக்கபடுகிறது.

பலன்
நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ்  பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.


கெளரி யோகம்
சந்திரன்  இலக்கினத்திற்கு கேந்திர,திரிகோணங்களி ல்  ஆட்சி, உச்சம பெற்றிருக்க, குரு  பார்த்தால்  கெளரி யோகம் ஏற்படும்.

மனம், எண்ணத்தின் காரகனான சந்திரனின் வலிமை யை   கொண்டு   இந்த யோகம்   விவரிக்கபடுகிறது. ஒ ருவருக்கு உடல் வலிமையை  விட மனோதைரியம்  தேவை  என்பதை  விளக்குவதாக அன்னை சக்தி தேவியின் பெயரில் இந்த யோகம் அமைந்துள்ளது.

பலன்
நல்ல உடல்வாகுடையவர், நற்செயல்களை செய்பவர்,  நல்எண்ணம் ,மனோதைரியம் உடையவராக இருப்பர்.


சரஸ்வதி  யோகம்
நற் கோள்கள் சுக்கிரன், குரு, புதன்  கேந்திர, திரிகோணங்களில்  அல்லது இரண்டாம் பாவகத்தில்  ஆட்சி , உச்சம்  பெற்றால் சரஸ்வதி யோகம் ஏற்படும்.

ஒருவரின்  வாக்குவன்மையை, பேச்சாற்றலை  குறிக்கும் 2ம் பாவகத்தை கொண்டும், நற் கோள்களான  புதன்,  குரு, சுக்கிரன்  2ம் பாவகத்தில் மற்றும்  கேந்திர, திரிகோணங்களில்  வலிமை பெறுவதை கொண்டு  கல்வியின்  அதிபதி  அன்னை சரஸ்வதி தேவியின் பெயரில்  இந்த யோகம் விளங்குகிறது.

பலன்
நுண்ணறிவாளர் , எழுத்தாளர், நாடகம், கதை, கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு  அதிகம் ஏற்படும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் .