கோச்சார கிரக சஞ்சார ரீதியான ஜோதிட ஆய்வு பதிவு மட்டுமே இது, (அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதல்ல )
இயற்கை பாப கிரகங்களான சனி, செவ்வாய் சேர்க்கை, பரஸ்பர பார்வை தீய பலன்களை அதிகம் தரக்கூடியவை, தற்பொழுது ( திருக்கணித ரீதியாக ) ஆவனி 11, 27-8-2017 முதல் புரட்டாசி 27,13-10-2017 வரை. சனி விருச்சிகத்தில், செவ்வாய் சிம்மத்தில், (உடன் சூரியன்)
சனி தனது 10ம் பார்வையால் செவ்வாயையும், செவ்வாய் தனது 4ம் பார்வையால் சனியையும் பார்வை செய்வது மேலும் இவை நெருப்பு, நீர் ராசியில் ஏற்படுவது உலகியல் ஜோதிட ரீதியாக பாதிப்பை தருபவையே.
நிலநடுக்கம், புயல், வெள்ளம், மலை சரிவு, கடல் உள்வாங்குதல், நெருப்பினால் பெரும் விபத்துகள் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து அவற்றால் பல இழப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. கடலோர பகுதி, மலை பகுதிகளில் இருக்கும் மக்கள் சற்று எச்சரியுடன்
இருப்பதும், பயணங்கள் மேற்கொள்வதும் சிறப்பு. மேலும் பாதிப்படைய வாய்ப்புடைய நாடுகள், மாநிலங்கள், தமிழகம், கேரள, தெலுங்கானா, ஹிமாச்சல், குஜராத், ஒரிசா, இத்தாலி, பிரான்சு, இலங்கை, ருமேனியா, ஆப்கானிசுத்தான், பிரேசில், ஷ்வீடன், சிரியா, நார்வே, அல்ஜீரிய, பெங்கால் அஷ்ட்ரோ கண்ணன் பரம்பரை ஜோதிடர், ஜோதிட ஆய்வாளர்