Friday 15 August 2014

கே.பி பிரசன்னம்

ஜாதகம் இல்லாதவர்கள்,  பிறந்த  நாள், நேரம்  சரியாக  தெரியாதவர்கள்  தனது  எதிர்கால  பலனை   அறிந்து  கொள்ள  உள்ள ஜோதிட முறை   பிரச்சனம்  ஆகும்,  பல  வகை  பிரச்சனம் உண்டு, இவை  பழங்காலம் முதல்   வழக்கத்தில்  உள்ளது,  பிரசன்னத்தில்  தான் நினைத்த ஒரு காரியம்  நிறைவேறுமா ? நிறைவேறும்  என்றால் எப்பொழுது? என்பனவற்றை தெரிந்து கொள்ளலாம்.  கேள்வியானது  ஆத்மார்த்தமாக உண்மை  நிலையோடு  இருக்கும்  பட்சத்தில்  அதற்கான  பலனை  காட்டிவிடும்,  பாரம்பரிய  ஜோதிட  முறையில்  பல  பிரச்சனன, ஆருட  வகைகள்  உண்டு,  நவீன முறையில்  கே.பி  பிரச்சனம் எவ்வாறு  என்பதனை  இங்கு  காணலாம்.

கே.பி பிரசன்னத்தில் 249 எண்களுக்குள் ஒன்றை கூற சொல்லி கேள்வி நேரத்திற்கான பாவக ஆரம்ப முனை கொண்டு பலன்களை தீர்மானித்து ஆளும் கிரகங்களை கொண்டு உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆளும் கிரகங்கள்
1. நாளின் அதிபதி
2.சந்திரன் நின்ற இராசி அதிபதி
3.சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி
4.இலக்கினம் நின்ற இராசி அதிபதி
5.இலக்கினம் நின்ற நட்சத்திர அதிபதி


ஆஸ்ட்ரோ  கண்ணன் 


9600553314

No comments:

Post a Comment