Monday 18 May 2015

கனவு பலன்கள்



ஆதிகாலம்  முதல்  மனிதர்கள்  இரவு உறக்கத்தில் வரும் கனவுகளை கொண்டு  பலன்களை  அறிந்து கொள்வதில்  ஆர்வம்  கொண்டுள்ளனர், கனவுகளை பொருத்தவரை   அதில்  வரும்  காட்சிகள்,  நபர்கள், இடங்கள், செயல்கள்  இவற்றின்   அடிப்படையில்   பலன்கள்  அமையும். 

நவீன  காலத்தில்  கனவுகளுக்கு  பலன்களா  என்று  கேட்பவர்கள் உண்டு, ஆனால்   நடைமுறையில்   இவர்கள் தான்  முதலில்   கனவு  பலன்களை தெரிந்து   கொள்ள   ஆசைப்படுவர்.

நமது  ஆழ்மனதில்  என்ன  உள்ளதோ  அதுவே கனவாக  வரும்  என்பது  ஆய்வாளர்களின் கருத்து. உத . ஒருவருக்கு  ஒன்றின் மேல்  தீராத மோகம், ஆசை, காமம் போன்றவை  இருக்கும் பொழுது  நாகங்கள்,  (சர்ப்பம் )  அவர்  கனவில்   வரும். 

 ஜாதக  ரீதியாக ராகு, கேது திசா, புக்தி  நடப்பவர்களுக்கு  இது  போல  நாகங்கள்  கனவில் தோன்றும் என்பது  என்னுடைய  கருத்து மற்றும்  அனுபவமும்   கூட.  ஜாதகத்தில்  12ம் பாவகம் உறக்கத்தை  குறிக்கும், இங்கு  தீய கிரகங்கள்  இருந்தால்  உறங்கும்  நேரம்  குறைவாக  இருக்கும்,  தீய கனவுகளும்  அதிகம்  வரும்.

பகலில்  காணும்  பலிக்காது,  அவற்றிக்கு  பலன் இல்லை என்றும்   கூறப்படுகிறது.   உறங்கிய  உடனே  கனவு கண்டால்  ஓராண்டிலும்,  மூன்று மணி  நேரங்களுக்கு பின்   கண்ட  கனவு  8 மாதங்களிலும்,  நள்ளிரவில்   காணும்  கனவு  3 மாதங்களிலும்,  அதிகாலை கனவு 1மாதத்திலும், காலை  எழும் முன்   காணும்  கனவு உடனடியா கவும் பலிதமாகும்.

கனவுகள் சுப, அசுப கனவுகள் என  உள்ளன,  அசுப  கனவு  கண்டால் உடனே  எழுந்து    கடவுளை  பிரார்த்தனை  செய்வதும்  வழக்கத்தில் உள்ளது.  பெரும்பாலும்  கனவில்  என்ன  என்ன தோன்றுகிறதோ   அதன்  (சுப, அசுப ) தன்மையை   வைத்தே  அதன்  பலன்களை  தீர்மானிக்கலாம்.

சில கனவுகளும் அதன் பலன்களையும் காண்போம் 

1.விமானம், கப்பலில் பயணம், புதிய கட்டிடம்     -   பணி (வேலை ) மாற்றம்.  
 2.  வீடு கட்டுவது போல் கனவு -பிரிந்தவர்கள்  ஒன்று  சேர்தல்.
3.சமையல்  செய்தல் -  மகிழ்ச்சியான  செய்தி  வருவது.
4.பறவைகள் - சூழ்நிலை  மாற்றம் எற்படும்.
5.சுடுகாடு,இடுகாடு  -  உடல்  நலம்  பாதிக்க போவதன்  அறிகுறி 
6.பாலத்தின்  அடியில்   நடப்பது  போல்  -  கெடுதல்,
7.பாலத்தின்  மேல்   நடப்பது  போல்  -   வெற்றி  மேல்  வெற்றி 
8.எறும்பு  கூட்டம்   கண்டால்-  கவலைகள், தொல்லைகள்  உருவாகும்.
9.எருமை கடா,கரடி  -  கெடுதலின்  அறிகுறி 
10. வாகனம் ஓட்டுவது  போல்  கனவு -  பொருளாதார  மேன்மை 
11.விபத்து நடப்பது போல்  கனவு -   போடும்   திட்டங்கள்   சிதறும்.
12.நூல்கள்  படிப்பது   போல்   கனவு -    நல்ல எதிர்காலத்தின்  அறிகுறி.
13.கடிகாரம் வாங்குவது -  வியாபாரத்தில்  லாபம்.
14.கடைவீதியை  கண்டால் -  பொருளாதார  மேன்மை.
15.பலுன்  கனவில் -  தேவையற்ற  முயற்சி, நேர  விரையம் ஏற்படும்.
16.எலும்பு கண்டால் - தன  வரவு,செல்வ செழிப்பு.
17. பசு,  குழந்தைகள்,   - கவலைகள் அகலும், லாப செய்திகள்  வரும்.
18.முதலைகள்  கண்டால் -  எதிரிகள்  உருவாவர்கள்.
19.மருத்துவர்  -நோய்  ஏற்படுவதன்  அறிகுறி.
20.கழுகு  பறப்பது,  மாலைகள்,  வெள்ளை பூக்கள்  -  லாப செய்தி  வரும்.
21.வானவில்,மீன்  கனவில்  வந்தால் -புதிய உறவுகள்,நற்செய்தி, மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி  போன்ற  பலன்கள்  ஏற்படும்.












  

No comments:

Post a Comment