Monday 7 September 2015

செப்டம்பர் மாத ராசிபலன்



மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 பாதம்) 
மேஷ ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் செவ்வாய் சிம்மத்திற்கு பெயர்ச்சி ஆவதால்  கடந்த 1 மாத காலமாக இருந்த மன குழப்பம் நீங்கும், புத்துணர்வு பெறுவீர்கள், உடல் நலன் சீராகும், புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள், தொழில், வேலை வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஒற்றுமை போன்ற உங்களுக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும். 

பணம் கொடுக்கல் வாங்கலில், பொது பிரச்சனைகளில் கவனம் தேவை. 

சந்திராஷ்டமம் : 18.09.2015 இரவு முதல் 20.09.2015 பின் இரவு வரை. கவலை, விரையம் ஏற்படலாம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடும், சிவ பெருமான் வழிபாடும் செய்வது சிறந்தது. 

.................................................................................................................................... 

ரிஷபம் ( கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்கள் ) 
ரிஷப ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் சுக்கிரன் 3ல், புதிய முயற்சிகளை அதிகம் மேற் கொள்வீர்கள், அவை செயலுக்கு வருவதில் சிறிய தடை, தாமதம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான புதிய கடன்கள் கிடைக்கும், வரவுகளை விட செலவு அதிகரிக்கும், சிலருக்கு வேலை, தொழில், வியாபார இருப்பிட மாற்றம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை, தொழில் முறை போட்டி உருவாகும். 

தேவைகேற்ற பண வரவு இருக்கும், புதிய முயற்சிகளில் நன்கு ஆலோசித்து செயல்படுதல் நன்று. 


சந்திராஷ்டமம் : 20.09.2015 பின் இரவு முதல் 23.09.2015 காலை வரை உடல் உபாதைகள் ஏற்படலாம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

வெள்ளிகிழமை மகாலட்சுமி, அம்மன் வழிபாடும், புதன்கிழமை பெருமாள் வழிபாடும் செய்வது சிறந்தது. 


............................................................................................................................

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் ) 
மிதுன ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் புதன் 4ல் ஆட்சி பெற்றிருக்கிறார், உடன் ராகு இருப்பதால் உடல் நலனில் அக்கறை தேவை, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், குடும்பத்திற்குரிய ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டு, வீடு, வாகனம் பராமரிப்பு பணிகளை மேற் கொள்வீர்கள், கடன்கள் கிடைக்கும், கூட்டு தொழிலில் லாபம், நண்பர்களால் நன்மை , சுப செலவுகள் உண்டு. 

தொழில், வேலை தொடர்பான பயணங்கள் ஏற்படும், பேச்சில் கவனம் தேவை. 

சந்திராஷ்டமம் : 23.09.2015 காலை முதல் 25.09.2015 மதியம் வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

புதன்கிழமை பெருமாள் வழிபாடும், விநாயகர் வழிபாடும், செய்வது சிறந்தது. 

...........................................................................................................................

கடகம் ( புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ) 
கடக ராசி அன்பர்களே 

இந்த மாதம் குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் நடைபெறும், பொருளாதார நிலை நன்றாக இருக்கும், உங்கள் செல்வாக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும், வேலை பளு அதிகரிக்கும், சிலருக்கு உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கடன்கள் எளிதில் கிடைக்கும், குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உண்டு. அவசர முடிவுகளை தவிர்த்தல் நலம். 

சந்திராஷ்டமம் : 25.09.2015 மதியம் முதல் 27.09.2015 அதிகாலை வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

திங்கட்கிழமையில் அம்மன் வழிபாடும், செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடும், செய்வது சிறந்தது. 

.............................................................................................................................

சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் ) 
சிம்ம ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் சூரியன் ஆட்சி பெற்று உடன் குரு, 2ல் புதன் தன வரவு நன்றாக இருக்கும், குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் நடைபெறும், உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். அரசு வகை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வேலை தொடர்பான பயணங்களால் நன்மை உண்டு, ஆன்மீக, சமுதாய பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குழந்தைகள் வழியில் நன்மை, தொழில், வேலை , வியாபாரத்தில் புதிய முயற்சி, ஒப்பந்தம் கைகூடும். ஆன்மீக , பொதுப்பணி முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு ஏற்படும். செலவுகளில் கவனம் தேவை 


27.09.2015 அதிகாலை முதல் 29.09.2015 மாலை வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வழிபாடும், வியாழக்கிமை குரு பகவான் வழிபாடும் செய்வது சிறந்தது. 

............................................................................................................................

கன்னி ( உத்திரம் 2,3,4ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2 ஆம் பாதங்கள் ) 
கன்னி ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் புதன் ஆட்சி பெற்று உடன் ராகு , வேலை வாய்ப்பு முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபரத்தில் சிறு மாறுதல் செய்வீர்கள், வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் கவனம் தேவை, தீடிர் தன வரவு உண்டு, அலைச்சல்கள் அதிகம் ஏற்படும், நண்பர்களுடன் சிறிய முரண்பாடுகளுக்கு வாய்ப்பு உண்டு, உடல் நலனில் கவனம் தேவை 


02.09.205 காலை முதல் 04.09.2015 மதியம் வரை மற்றும் 
29.09.2015 மாலை முதல் 1.10.2015 மதியம் வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

புதன்கிழமை பெருமாள் வழிப்பாடும், குலதெய்வ , காவல் தெய்வம் வழிப்பாடு செய்வது சிறந்தது. 


...........................................................................................................................

துலாம் ( சித்திரை 3,4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் ) 
துலா ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் சுக்கிரன் 10ல் , 11ல் சூரியன், குரு, 12ல் ராகுவுடன், உச்ச புதன், தொழில் , வேலையில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு விலகும், சுப செலவுகள் அதிகரிக்கும், குடும்பத்தில் கணவன், மனைவி உறவில் விட்டு கொடுத்து செல்லுதல் நலம். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு, தொழில் போட்டி ஏற்படும், 
கடன்கள் கிடைக்கும், புதிய வியாபார முயற்சி தாமதமாகும். 
வேலை பளு அதிகரிக்கும், உடல் நலனில் அக்கறை தேவை. 

04.09.2015 மதியம் முதல் 06.09.2015 மாலை வரை, அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

வெள்ளிகிழமை மகாலட்சுமி, அம்மன் வழிபாடும், குலதெய்வ , காவல் தெய்வம் வழிபாடு செய்வது சிறந்தது. 


............................................................................................................................

விருச்சிகம் ( விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை ) 
விருச்சிக ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் செவ்வாய் தனது நீச வீட்டிருந்து 10 இடமான சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார், 10ல் சூரியன், குரு, 11ல் உச்ச புதன், ராகு, தேவைகேற்ற பண வரவு உண்டு, அவை கடன், வாடகை, அடமானம் போன்றவற்றின் மூலமாக இருக்கலாம். தொழில் போட்டியும், வேலைபளுவும், அலைச்சல்களும் அதிகரிக்கும், ஆடம்பர பொருள் சேர்க்கை எற்படும், உங்கள் செயல்கள் கடின முயற்சிகளுக்கு பிறகு வெற்றி பெறும். மனக்குழப்பம் ஏற்படும், உடல் நலனில் கவனம் தேவை. 


06.09.2015 மாலை முதல் 08.09.2015 மாலை வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 


செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடும், வியாழக்கிமை குரு பகவான் வழிபாடும் செய்வது சிறந்தது. 


...........................................................................................................................

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்) 
தனுசு ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் குரு உடன் ஆட்சி பெற்ற சூரியன், 

தெய்வ பலம் கூடும், புத்துணர்வு பெறுவீர்கள், உடல் நலம் சீராகும், 
குடும்பத்தில் மன மகிழ்ச்சி, சுப காரிய பேச்சுகள் நடைபெறும். 
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில், வேலையில் சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். 
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு, ஆன்மிக சுற்றுலா சென்று 
வரும் வாய்ப்பு உண்டு, தொழில் முறை பயணங்கள் அதிகம் இருக்கும், பொது பிரச்சனைகள், நண்பர்கள் வகையில் கவனமாக இருப்பது நலம். 

வியாழக்கிமை குரு பகவான் வழிபாடும், செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடும் செய்வது சிறந்தது. 

08.09.2015 மாலை முதல் 11 .09.2015 காலை வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

............................................................................................................................

மகரம் ( உத்திராடம் 2,3,4ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதங்கள் ) 
மகர ராசி அன்பர்களே 

இந்த மாதம் புதிய வேலை வாய்ப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் கவனம் தேவை, பொருளாதர நிலையில் சற்று பின்னடைவு உண்டு, எனினும் கணவன், மனைவி குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். தொழில், வேலை தொடர்பான முயற்சிகளில் சிறு தடை தாமதம் ஏற்படும், வேலைபளு அலைச்சல்கள் அதிகரிக்கும், 

பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை, புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செய்தல் நலம். 

11 .09.2015 காலை முதல் 13.09.2015 இரவு வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

சனிக்கிழமை பெருமாள், காவல் தெய்வம் வழிபாடு, வெள்ளிகிழமை மகாலட்சுமி, அம்மன் வழிபாடும் செய்வது சிறந்தது. 

............................................................................................................................

கும்பம்( அவிட்டம்3, 4 ஆம் பாதங்கள், சதையம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள் ) 
கும்ப ராசி அன்பர்களே 

இந்த மாதம் கணவன், மனைவி வழி உறவுகள், மற்றும் நண்பர்களால் நன்மை அடைவீர்கள், கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், பொருளாதர மேன்மையால் கடன்கள் குறையும், அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள், தொழில், வியாபாரத்தில் தேக்க நிலை மாறும், சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு பயண ங்களால் லாபம் உண்டு, குடும்பத்தில் திருமண போன்ற சுப காரிய பேச்சுகளில் நடைபெறும், வாகன போக்குவரத்து, பிறக்கு ஜாமீன் போன்றவற்றில் கவனம் தேவை. 

13.09.2015 இரவு முதல் 16.09.2015 காலை வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

சனிக்கிழமை பெருமாள், காவல் தெய்வம் வழிபாடு செய்வது சிறந்தது. 

...........................................................................................................................
மீனம் ( பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ) 
மீன ராசி அன்பர்களே 

இந்த மாதம் ராசி நாதன் குரு 6ல், உடன் சூரியன் ஆட்சி, 7ல் உச்ச புதன் உடன் ராகு 

வெளிநாடு வேலை முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும், கடன்கள் எளிதில் கிடைக்கும், இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி உறவில் விட்டு கொடுத்து செலுத்துதல் நலம்,கூட்டு தொழில், நண்பர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம், வியாபாரத்தில் போட்டியாளர்களின் இடையூறு அதிகம் இருக்கும், மறைமுக எதிரிகள் உருவாவர்கள், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ஏற்றுமதி, 

பேச்சியிலும், செயலிலும், உடல் நலனிலும் கவனம் தேவை 

16.09.2015 காலை முதல் 18.09.2015 இரவு வரை அவசரம், கோபம், புதிய முயற்சிகளை தவிர்த்தல் நலம். 

வியாழக்கிமை குரு பகவான் வழிபாடும், திங்கட்கிழமையில் அம்மன் வழிபாடும் செய்வது சிறந்தது. 


"ஜோதிட ரத்னா " 
ஆஸ்ட்ரோ கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
Email : astrorkannan@gmail.com 
திருப்பூர்

No comments:

Post a Comment