இது வரை கடகத்தில் உச்சம் பெற்றிருந்த குரு, இப்பொழுது தனது நண்பரான சூரியனின் ராசி சிம்மத்தில் பிரவேசிப்பதால் உலகில், நாட்டில் ஏற்படும் பொருளாதாரம், உற்பத்தி, பொருட்களின் விலை ஏற்ற, இறக்கங்கள் போன்ற பொது பலன்களை பார்ப்போம்.
தங்கம்,வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்கள், அரிசி, கோதுமை, பயிறு போன்ற தன்ய வகைகள் விலை உயரும். அரசியல், சமூக சேவை போன்ற பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு நற்பெயர், பாராட்டு கிடைக்கும்.
மக்கள் நலம் சார்ந்த புதிய திட்டங்கள், சட்டங்கள், நெறிமுறைகள் உருவாகும். மக்களுக்கு மனித நேயம், பொது சேவை, ஆன்மிகம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். நெருப்பினால் சேதம், விமான போக்குவரத்தில் சில சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு .
நேர்மை, ஒழுங்கு போன்றவற்றின் கை ஓங்கியிருக்கும், உணவு உட்பட முக்கிய பொருட்களை பதுக்கி வைத்திருப்போர் சட்டத்தின் பிடியில் சிக்குவர்.
நல்ல மழை பொழிவு இருக்கும், நீர் ஆதாரம் பெருகும், விவசாயம் செழிக்கும், பொருளாதார மேன்மை ஏற்படும், அத்தியாவசிய பொருட்க ளின் விலை மிதமாக (கட்டுக்குள்) இருக்கும், பொது சேதாரம், வீன் செலவுகள் குறையும், பழமையான திருக்கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.
12 வருடங்களுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்கும் பொழுது நடைபெறும் மகாமகம் இந்த ஆண்டு நடைபெறும்.
No comments:
Post a Comment