Sunday 22 February 2015

பரிவர்த்தனை யோகம்





இரண்டு கிரகங்கள் தங்கள்  வீடுகளில் (ராசி )  மாறி அமர்வது பரிவர்த்தனை யோகம் ஆகும்.  

பொதுவாக  பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சிக்கு இணையான பலம் பெறுகின்றன .

கிரக பரிவர்த்தனையால்  நன்மையும்  உண்டு, தீமையும் உண்டு.
அவை  பரிவர்த்தனை பெறும்  கிரகங்களின்  சுபாவ தன்மை   மற்றும் ஆதிபத்திய தன்மையை பொறுத்தது.

பரிவர்த்தனைகள்  மொத்தம் 66 வகையாகும் , இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளது. அவை 
1.மஹா  யோகம்
2.தைன்ய  யோகம்
3.கஹல  யோகம்
ஆகும்.

இவற்றுள்  மஹா யோகம்  28 பிரிவுகளாகவும்,  தைன்ய  யோகம் 30 பிரிவுகளாகவும், கஹல யோகம்  8 பிரிவுகளாகவும் உள்ளது. 

1) மஹா பரிவர்த்தனை யோகம் :- 1, 2,4, 5, 7, 9, 10, 11 ஆகிய  பாவகங்களின்  அதிபதிகள்  தங்களுக்குள்  ஒருவருக்கொருவர்  பரிவர்த்தனை அடைந்தால் அது மஹா யோகம்  ஆகும்,  இந்த  யோகத்தில் பிறந்த ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

2) தைன்ய பரிவர்த்தனை :-  6,8,12ஆம்  பாவகங்களின்  அதிபதிகள்  தங்களுக்குள்  ஒருவருக்கொருவர்  பரிவர்த்தனை அடைதல்  மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11  பாவக  அதிபதிகளுடன்  பரிவர்த்தனை அடைவதாலும் ஏற்படுவது  தைன்ய யோகம்  ஆகும். இவை  தீய  பாவகங்களின் தொடர்பு  பெறுவதால்  தீமையான  பலன்கள் அதிகம் தரும்.

3) கஹல பரிவர்த்தனை:- மூன்றாம் பாவக அதிபதி 1, 2, 4, 5, 7, 9, 10, 11  பாவக  அதிபதிகளுடன்  பரிவர்த்தனை அடைவதால் ஏற்படுவது  கஹல  யோகம்  ஆகும்.  மூன்றாம்  பாவக காரகமான  துணிச்சலை தந்து தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும்  நிலையை தரும். இந்த யோகத்தில் பிறந்தவர்  சில நேரங்களில் நல் வார்த்தைகளும், சில நேரங்களில் கடுமையான வார்த்தைகளும் பேசும்  தன்மை உடையவர், (முயற்சி ஸ்தானம்) முன்னே ற்றதிற்காக அதிகம் உழைக்கும் நிலை ஏற்படும்.

தீய கிரகங்கள் ஒன்றுக்கொன்று  பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

அது போல   தீய கிரகங்கள் ஒன்றுக்கொன்று   பரிவர்த்தனை அடையும் போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றுக்கொன்று   பரிவர்த்தனை அடையும் போது  நன்மைகள் அதிகமாகும்.

மேலும்  ஒன்றுக்கொன்று  நட்பான  கிரகங்கள் பரிவர்த்தனை  பெறுவது நன்மையையும், ஒன்றுக்கொன்று பகையான கிரகங்கள் பரிவர்த்தனை  பெறுவது தீய பலன்களையும் தரும்.

நன்றி  
அஸ்ட்ரோ  கண்ணன் 

No comments:

Post a Comment