Tuesday 16 June 2015

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 தனுசு




தனுசு   
உங்கள் ராசி  மற்றும்  4 ஆம் அதிபதி  குரு  ராசிக்கு 9  ல்   பெயர்ச்சியாகிறார். 

அவருக்கென்ன   " 9ல்   குரு "  என்ற வார்த்தை   பெரும்பாலோருக்கு தெரிந்த  வெகு  பிரபலமாக  வார்த்தையாக   உள்ளது.  

ஒருவர்  ஜாதகத்தில்  தெய்வ   பலம்  பொருந்திய   9ல்  குரு  இருப்பது சிறப்பு,  மேலும்    அவரின்  பார்வைகள்   சுப  ஸ்தனங்களான 1, 5 திரிகோனங்களில் படும்,  ( குரு இயற்கை சுப கிரகம் தான்  எனினும்   எல்லா  இலக்கினங்களுக்கும்  சுபரல்ல,  ஆதிபத்திய ரீதியாக  சில லக்கினங்களுக்கு  அசுபராகவும்  உள்ளார். ) ஒருவர்  ஜாதகத்தில்  1,5,9  பாவங்கள் பெறும் வலுவே  அவர்  இப்பிறவியில்  எத்ததைய  பலன்களை பெறுவார் என்பதனை  அறியாலம், இந்த  வீடுகளும், அதிபதிகளும்  வலிமை பெற  ஜாதகர்  எத்தகைய   பிரச்சனைகளையும்  தெய்வ  அருளால் சமாளித்து   வெற்றி காண்பார்.

கோச்சரத்தில்  குரு  9ல்  வந்தாலும் அந்த ஓராண்டு இத்தகைய  நற்பலன்கள்  நடைபெறும்,

கடந்த  ஓராண்டு   ராசி அதிபதியாக   உச்சம் பெற்றாலும்  அஷ்டம குரு என்பதால்  அவதிகளும்,  சிரமங்களும்  ஏற்பட்டது.

இனி   ஏழரை  சனி  காலத்தில்  விரைய சனி காலம்  நடந்து கொண்டிருந்தாலும்   பாக்கிய ஸ்தானம்  எனும் 9ம்  இடத்திற்கு  வரும் குரு  பல  சாதகமான  பலன்களை  வழங்குவார்.

நீண்ட நாள் பிரச்சனைகள்  சுமூகமான  முடிவிற்கு வரும், வீன்  செலவுகள்  குறைந்து  சுப  செலவுகள்  அதிகம்  ஏற்படும்,திருமணம்  ஆகாதவர்களுக்கு   திருமணம்  நடைபெறுவதற்கும்,
குழந்தை  தாமதம்  ஆனவர்களுக்கு   குழந்தை பாக்கியம்  கிடைப்பதற்கும்  சாதகமான   காலம்.  

உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கு உயரும்,  அதிஷ்டமான சில  நிகழ்ச்சிகள் நடைபெறும்.  கணவன் - மனைவி , குடும்ப ஒற்றுமை  நன்றாக இருக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு  வேலை கிடைக்கும்,  சிலருக்கு வேலையில்  ஊதிய  உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். 

தொழில்,வியாபாரம் , கூட்டு தொழில்  நன்றாக  இருக்கும்.
 தொழில், வேலை  தொடர்பாக   வெளிநாடு  செல்லும்  முயற்சியில்  உள்ளோருக்கு வெற்றி  கிடைக்கும்.  

அரசியல்,சமூக  பணிகளில்  இருப்போருக்கு  மக்களிடம்  செல்வாக்கு அதிகரிக்கும், பதவி,  பட்டங்கள்  பெறுவார்கள்.   

குரு,  மஹான்கள், ஞானிகள்   சந்திப்பும்,  ஆசியும்  கிடைக்கும்.

குரு  ஜென்ம ராசி, 3, 5  இடங்களை  பார்வை செய்கிறார், மனமகிழ்ச்சியும்,  உற்சாகமும் இருக்கும்,  சகோதர்களுடன்    , ஒற்றுமை ஏற்படும், முயற்சிகளில்  வேகம்  கூடும், வெற்றி கிட்டும்.குடும்பத்துடன்   குல தெய்வ  கோவில்  சென்று  வழிபடுவீர்கள்.  


2016  ஜனவரி -  மே வரை  குரு  வக்கிரம் பெறும் காலம்  காரியங்களில் தாமதம்,  தொழிலில்   மந்த நிலை,  வீன் செலவுகள்  ஏற்படலாம், கவனம் தேவை.

வியாழக்கிமை குருபகவான் வழிபாடும். செவ்வாய்க்கிழமை திருசெந்தூர்   சென்று  முருகன்  வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

ஆஸ்ட்ரோ  கண்ணன் 
பரம்பரை ஜோதிடர் 
9600553314 
நெ.10. முத்து நகர்  2வது  வீதி,
கொங்கு மெயின்  ரோடு , திருப்பூர்- 641607.

No comments:

Post a Comment